இஸ்ரேல் மட்டுமில்லை.. சவுதி + பஹ்ரைன் + கத்தார் + UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?
டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தற்போது இஸ்ரேல், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதலை தொடங்கி உள்ளது. மொத்தமாக இன்று ஒரே நாளில் 7 நாடுகள் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இதனால் 3ம் உலகப்போர் வெடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாக இஸ்ரேல், அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டின. இதனை கண்டித்து கடந்த ஆண்டு இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து இன்று மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று டிரம்ப் ஈரானிடம் கூறினார். ஆனால் ஈரான் கேட்கவில்லை. இதனால் ஈரானை சுற்றி போர்க்கப்பல், போர் விமானங்களை நிலைநிறுத்தி மிரட்டி வந்தார்.
100 இடங்களில் தாக்குதல்
இதற்கிடையே தான் இன்று அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல், ஈரானை தாக்கியது. ஈரான் மீது ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் தாக்கியது. இதில் அமெரிக்க இணைந்தது. இதனால் 3 நாடுகளும் மல்லுக்கட்ட தொடங்கின.
இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரானில் 100 இடங்களை டார்க்கெட் செய்து தாக்குதல் நடத்தியது. போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களில் இருந்தும் ஏவுகணைகளை அமெரிக்கா அனுப்பியது.
அரபு நாடுகள் மீது தாக்குதல்
இதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. தங்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது டெல்அவிவ், ஜெருசலேம் நகரை நோக்கி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்காவுக்கு பாடம் புகட்டும் வகையில் அந்த நாட்டின் ராணுவ தளம், விமானப்படை தளம் உள்ள இடங்களை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.
அமெரிக்காவை எடுத்து கொண்டால் மத்திய கிழக்கில் பல நாடுகளில் விமான தளம், ராணுவ தளம், கடற்படை தளத்தை வைத்துள்ளது. பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சவுதி அரேபியா, ஈராக், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளிளில் ராணுவ முகாம், கடற்படைமுகாம், விமான தளங்களை வைத்துள்ளது.
இந்த தளங்களை வைத்து தான் அமெரிக்கா, ஈரான் உள்பட மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு அடிபணியாத நாடுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பஹ்ரைன்
அதன்படி பஹ்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்காவின் கடற்படை தளம் உள்ளது. வளைகுடா, செங்கடல், அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி இந்த கடற்படை தளம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு உதவி வருகிறது. அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், கடற்படை வீரர்கள் இங்கு உள்ளனர். இங்கு தான் தற்போது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் அமெரிக்காவின் ராணுவ தளம், விமான தளம் உள்ளது. இந்த இடத்தையும் ஈரான் குறிவைத்து தாக்கி உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் அமெரிக்காவுக்கு சொந்தமான அல் தாப்ரா விமான தளம் அமைந்துள்ளது. இந்த விமான தளத்தை நோக்கியும் ஈரான் தாக்குதலை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக அபுதாபியில் சில இடங்களில் தாக்குதல் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால்
கத்தார்
அதேபோல் கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தையும் ஈரான் குறிவைத்துள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவிற்கு வெளியே பாலைவனப்பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான அல் உதித் விமானப்படை தளம் உள்ளது. மொத்தம் 24 ஏக்கரில் இந்த விமான தளம் அமைந்துள்ளது. இது மத்திய கிழக்கில் கட்டளை மையத்தின் தலைமையகமாக உள்ளது.
இந்த விமானப்படை தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை அனுப்பியது. இருப்பினும் அங்குள்ள வான்வெளி பாதுகாப்பு அமைப்பு ஈரானின் ஏவுகணையை இடைமறித்து அழித்துள்ளது. இதனை கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
அமெரிக்காவுக்காவுக்கு தலைவலி
இப்படி ஈரான் சுற்றி சுற்றி அமெரிக்காவின் விமான தளம், ராணுவதளம், கடற்படை தளத்தை குறிவைத்து தாக்குவதால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை ஈரான், இஸ்ரேல், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா, ஏமனின் ஹவுதிகள் முன்னின்று நடத்துகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரானை தாக்கும் அதேவேளையில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதிகள் தாக்குதலை நடத்துகின்றன. இதனால் 3ம் உலகப்போர் வெடிக்கிறதா ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
-
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே











Click it and Unblock the Notifications