சுந்தர் பிச்சைக்கு சிஇஓ புரமோஷன் கிடைக்க இது தான் உண்மையான காரணமா?
நியூயார்க்: ட்விட்டர் நிறுவனம் சிஇஓ பதவி தருவதாக சுந்தர் பிச்சையிடம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் பிச்சை கூகுள் நிறுவன சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் நிறுவனம் புதிய சிஇஓவை தேடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் முக்கிய பங்காற்றி வரும் சுந்தர் பிச்சையை தங்கள் நிறுவன சிஇஓவாக வருமாறு ட்விட்டர் அழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ட்விட்டரின் முயற்சி பற்றி அறிந்த கூகுள் திறமைசாலியான பிச்சையை இழக்க விரும்பாமல் அவரை சிஇஓவாக ஆக்கிவிட்டது என்று பேசப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டர் நிறுவனத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,

ட்விட்டர்
நானும் அது பற்றி கேள்விப்பட்டேன். ட்விட்டர் நிறுவனம் சுந்தரை சிஇஓவாக பணியமர்த்த விரும்பியதை நினைத்து ஆச்சரியப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே அவரை பணியமர்த்த ட்விட்டர் முயற்சி செய்தது.

கூகுள்
ட்விட்டர் சுந்தரை தங்கள் பக்கம் இழுக்க முயல்வதை அறிந்த கூகுள் அவரின் சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்தி அவரை தக்க வைத்துக் கொண்டது என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.

மக்கள்
கூகுள் சுந்தர் பிச்சையை திடீர் என ஏன் சிஇஓவாக ஆக்கியது என்பது குறித்து மக்கள் ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பதவி உயர்வுக்கு பின் யார் இருக்கிறார்கள் என்பது பற்றியும் பேச்சு அடிபடுகிறது.
|
சாட்
அவர்கள் சுந்தர் ட்விட்டர் சிஇஓவாக ஆதை தடுக்கவே இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று சாட் ரோட்ரிகஸ் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
வதந்தி
இன்றைய வதந்தி: சுந்தர் பிச்சைக்கு சிஇஓ வேலை கிடைத்துள்ளது- அனேகமாக ட்விட்டரில் இருந்து இதை கூகுள் எப்படியாவது சமாளிக்க வேண்டும் என மேத்யூ இன்கிராம் கூறியுள்ளார்.
|
விலகல்
@rabois ஒப்புக் கொள்கிறேன். அவர் கூகுளில் இருந்து விலகி ட்விட்டரில் சிஇஓவாக சேர யோசித்துக் கொண்டிருந்தார். ஆன்ட்ராய்ட் மற்றும் யூடியூப்பை சுந்தரின் பொறுப்பில் விடுவது மட்டும் கதைக்கு சரியாகாது என அனில் தர்ணி ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications