மாலி பயங்கரவாத தாக்குதலில் 54 பேர் பலி- ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
பமாகோ: மாலி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 54 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.ஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மாலியில் மேனாகா பகுதியில் ராணுவ முகாமை இலக்கு வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 53 ராணுவ வீரர்களும் பொதுமக்களில் ஒருவரும் பலியாகினர்.

அண்மைக்காலத்தில் மாலியில் ராணுவ வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் இது. இத்தாக்குதல் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
இந்நிலையில் மாலி தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பேற்கிறோம் என ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தெரிவித்துள்ளது. அந்த இயக்கமானது அதன் அமாக் செய்தி ஊடகம் மூலம் இதை அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications