2 பேரை கட்டிடத்தோடு சேர்த்து குண்டு வைத்து தகர்த்துக் கொன்ற ஐஎஸ்: வீடியோவை பார்க்க வேண்டாம்!
ராக்கா: சிரியாவில் இருந்து தப்பிக்க நினைத்த 2 ஆண்களை ஒரு கட்டிடத்திற்குள் கட்டி வைத்து அந்த கட்டிடத்தையே குண்டு வைத்து தகர்த்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.
சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இடங்களில் ரஷ்யா உள்ளிட்ட நாட்டு ராணுவங்கள் வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் தீவிரவாதிகளுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிரவாதிகள் பலர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட்டுவிட்டு தப்பியோடி வருகிறார்கள். அப்படி தப்பியோடுபவர்களுக்கு பாடம் புகட்ட தப்ப முயன்ற 2 ஆண்களை தீவிரவாதிகள் ஒரு பெரிய கட்டிடத்தில் வைத்து கட்டினர்.
பின்னர் அந்த கட்டிடத்தை குண்டு வைத்து தகர்த்தனர். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை அந்த அமைப்பு பெருமையாக வெளியிடப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அக்கிரம வீடியோக்களை பார்த்துவிட்டு தாலிபான் தீவிரவாதிகள் கூட கண்டனம் தெரிவித்தனர்.
ஆட்களை கொலை செய்து வீடியோ வெளியிடுவதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு.












Click it and Unblock the Notifications