காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம்.. திடீரென மனம் மாறிய இஸ்ரேல்.. ஓகே சொன்னது ஏன்? பரபர பின்னணி
இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடக்கும் போரை 4 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு இஸ்ரேல் திடீரென ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகியவை பக்கத்தில் பக்கத்தில் உள்ளன. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவில் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தெரிவித்துள்ளது. மேலும் இருதரப்பும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த மாதம் 7 ம்தேதி இந்த மோதல் என்பது போராக மாறியது. அதாவது அன்றைய தினம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. அதோடு இஸ்ரேல் எல்லையை தகர்த்து அந்த நாட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி பொதுமக்களை சிறைபிடித்து சென்றது.
இதனால் கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கிவிட்டதாக கூறி தாக்குதலை தொடங்கினர். காசாவில் முதலில் வான்வெளி தாக்குதல் நடத்தப்ப்பட்டது. அதன்பிகு வடக்கு காசாவில் பல இடங்களில் இஸ்ரேல் படைகள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது போர் 46வது நாளாக நடந்து வருகிறது. இதுவரை காசாவில் 14 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1000க்கும் அதிகமானவர்களும் பலியாகி உள்ளனர்.
மேலும் இந்த போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 4 நாட்கள் காசாவின் பகுதிகளில் இஸ்ரேல் குண்டு வீசக்கூடாது. வான்வெளி தாக்குதல், தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது. ராணுவ வாகனங்களின் இயக்கம் என்பது காசாவில் இருக்க கூடாது. தெற்கு காசாவில் ட்ரோன்கள் பறக்க கூடாது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் காசா பகுதியில் இருந்து எங்கு வேண்டுமானாலும் நடமாடலாம்.
இந்நிலையில் தான் தற்போது காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் ‛ஓகே' கூறியுள்ளது. அதாவது நாளை முதல் 4 நாட்கள் காசாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த கத்தார் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு அமெரிக்காவும் உதவியது.
இந்நிலையில் தான் கத்தார் எடுத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பிணைக்கைதிகளை மீட்கும் வகையில் 4 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஓகே சொல்லி உள்ளது. அதன்படி நாளை முதல் 4 நாட்களில் 50 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுக்கவிக்க உள்ளது. அதன்பிறகு அடுத்த 10 நாட்களுக்கு தினம் 10 பிணைக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 4 நாட்கள் காசாவில் பகுதிகளில் இஸ்ரேல் குண்டு வீசக்கூடாது. வான்வெளி தாக்குதல், தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது. ராணுவ வாகனங்களின் இயக்கம் என்பது காசாவில் இருக்க கூடாது. தெற்கு காசாவில் ட்ரோன்கள் பறக்க கூடாது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் காசா பகுதியில் இருந்து எங்கு வேண்டுமானாலும் நடமாடலாம்.
இந்த போர் நிறுத்த நடவடிக்கையின்பாது மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு வரும் உதவிகள் அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இங்கு போர் தொடர்ந்து நடந்து வந்த மோதலுக்கு நடுவே காசா மக்களுக்கு இந்த போர் நிறுத்த நடவடிக்கை என்பது சற்று ஆறுதலான அம்சமாக உள்ளது. அதோடு இந்த 4 நாள் தற்காலிக போர் நிறுத்தம் என்பது முழு போர் நிறுத்தமாக வரும் நாட்களில் மாற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக உள்ளது. அது நடக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications