காஸாவில் 'போர்க் குற்றங்களில்' இஸ்ரேல் ஈடுபட்டிருக்க வாய்ப்பு: நவநீதம் பிள்ளை
ஜெனிவா: பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி கடந்த 15 நாட்களாக இஸ்ரேலின் குண்டு மழைகளால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இஸ்ரேலின் வெறியாட்டம்...
- சுமார் 700க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பச்சிளங்குழந்தைகள்.
- சுமார் 5 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 5 ஆயிரம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துவிட்டனர்.
- புற்றுநோயை உருவாக்கக் கூடிய வெண்பாஸ்பரஸ் கொத்து குண்டுகளையும் இஸ்ரேல் வீசி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஐநாவின் தலையீடு
- இந்த நிலையில்தான் இஸ்ரேலின் காஸா தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் நிறைவேற்றி இருக்கிறது.
- மேலும் காஸாவின் மீது தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் இஸ்ரேல் போர்க் குற்றங்களை இழைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
- காஸா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை இலக்கு வைத்தே இஸ்ரேல் தாக்கியதை நவநீதம்பிள்ளை சுட்டிக் காட்டியிருக்கிறார்.
- மேலும் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டன என்று இஸ்ரேல் கூறுவது தொடர்பாக சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார் நவநீதம் பிள்ளை.
-
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications