காஸாவில் 'போர்க் குற்றங்களில்' இஸ்ரேல் ஈடுபட்டிருக்க வாய்ப்பு: நவநீதம் பிள்ளை

Subscribe to Oneindia Tamil

ஜெனிவா: பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி கடந்த 15 நாட்களாக இஸ்ரேலின் குண்டு மழைகளால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

Israel-Gaza conflict: Israel may have committed war crimes, says UN human rights chief

இஸ்ரேலின் வெறியாட்டம்...

- சுமார் 700க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பச்சிளங்குழந்தைகள்.

- சுமார் 5 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 5 ஆயிரம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துவிட்டனர்.

- புற்றுநோயை உருவாக்கக் கூடிய வெண்பாஸ்பரஸ் கொத்து குண்டுகளையும் இஸ்ரேல் வீசி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஐநாவின் தலையீடு

- இந்த நிலையில்தான் இஸ்ரேலின் காஸா தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் நிறைவேற்றி இருக்கிறது.

- மேலும் காஸாவின் மீது தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் இஸ்ரேல் போர்க் குற்றங்களை இழைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

- காஸா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை இலக்கு வைத்தே இஸ்ரேல் தாக்கியதை நவநீதம்பிள்ளை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

- மேலும் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டன என்று இஸ்ரேல் கூறுவது தொடர்பாக சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார் நவநீதம் பிள்ளை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+