ஹமாஸ்க்கு பெரிய அடி.. குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. காசா எல்லைப்பகுதியை மீட்டதாக அறிவிப்பு
டெல் அவிவ்: காசா எல்லைப்பகுதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. போரினால் இதுவரை இரு தரப்பிலும் சேர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த 7ம் தேதி, காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதலை தொடங்கினர். ஆபரேஷன் அல் அக்ஷா புயல் என்ற பெயரில் தாக்குதலை ஹமாஸ் பயங்கரவாதிகள் தொடங்கினர்.

இந்த தாக்குதலில் இஸ்ரேல் திக்கு முக்காடிப்போனது. ராக்கெட் மழை பொழிந்து ஒருபக்கம் தாக்குதல் என்றால் மற்றொரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சரமாரி தாக்குதலை தொடுத்தனர். இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரை அறிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு தாக்குதலை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையெயான போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது.
75 ஆண்டுகளில் இல்லாத அளவு: இதனிடையே இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போர் 4-வது நளாக நீடித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை திடீரென இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் மூலமாக தாக்குதல் நடத்தியது மட்டும் இன்றி கார், மோட்டார் சைக்கிள், பாராசூட்டில் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கு கண்மூடித்தனமாக தாக்கினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் உக்கிரமாக பதிலடி கொடுத்து வருகிறது.
பாலஸ்தீனத்துடன் போர் தொடங்கி உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்து தாக்குதலை தொடங்கி உள்ளார். காசா பகுதியில் போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் குண்டுகளை வீசி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே அவ்வப்போது மோதல் வெடித்து வருவது வாடிக்கைதான் என்றாலும் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது யுத்தம் தீவிரம் அடைந்துள்ளது.
3000 பேர் பலி: இந்த தாக்குதலில் தற்போது வரை இருதரப்பையும் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் 6000 பேர் காயமடைந்துள்ளனர். குழந்தைகள், பெண்களும் பலியாகி உள்ளதோடு, ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதனிடையே, காசா எல்லைப்பகுதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, காசாவில் இருந்து ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், லெபனானில் இருந்தும் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை குறிவைத்து லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதால் இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேலிய ராணுவம் பீரங்கித் தாக்குதலை தொடங்கியுள்ளது.
-
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications