ஜப்பான் நிலநடுக்கம்.. 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு.. 2 பேர் பலி.. சுனாமி எச்சரிக்கை வாபஸ்!
டோக்கியோ: ஜப்பானில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 2 பேர் பலியாகி உள்ளனர். அங்கு அறிவிக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஜப்பானின் புகுஷிமா பகுதி அருகே 7.3 ரிக்டர் அளவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
டோக்கியோவில் இருந்து 270 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அதே சமயம் டோக்கியோவில் நிலநடுக்கம் காரணமாக கடுமையான மின்தடை ஏற்பட்டது.

2 பேர் பலி
கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு உள்ளனர். 2011ல் இதே புகுஷிமா கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே இது வடக்கு ஜப்பான் பகுதியில் இப்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் காரணமாக 2 பேர் பலியானார்கள். 97 பேர் காயம் அடைந்தனர்.

மின்சாரம்
2011 மார்ச் 11ம் தேதி அங்கு இந்த பேரழிவு ஏற்பட்டது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது. அப்போது அந்த நிலநடுக்கம், சுனாமி, புகுஷிமா அணு உலை கசிவு காரணமாக 20 ஆயிரம் பேர் மொத்தமாக பலியானார்கள். ஆனால் இந்த முறை சுனாமி ஏற்படாத நிலையில் ஜப்பானில் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஜப்பானில் மொத்தம் 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் தடை பெற்றது. டோக்கியோவில் மட்டும் 7 லட்சம் வீடுகளில் மின்சாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணு உலை
இதனால் கிழக்கு ஜப்பான் பகுதியில் பல்வேறு சிறிய குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. ஆனாலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை. அங்கு அணு உலைகள் எதுவும் இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்படவில்லை. புகுஷிமாவில் பாதிக்கப்பட்ட அணு உலையில் மட்டும் நிலநடுக்கத்தை தொடர்ந்து அபாய ஒலி ஒலித்துக் கொண்டு இருந்தது. ஆனால் அங்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

ஏன் வருகிறது
இன்னொரு பக்கம் ஜெபம்பனில் ஷான்கேசன் என்று பகுதியில் புல்லட் ரயில் தடம் புரண்டது. புல்லட் ரயில் நகர்ந்து கொண்டு இருக்கும் போதே திடீரென அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் புல்லட் ரயில் 100 பயணிகளோடு தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் பலியாகவில்லை. அதேபோல் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. ஜப்பான் பசிபிக் கடலில் "ring of fire" எனப்படும் அதிக அளவிலான பூமி தகடு அதிர்வு ஏற்படும் பகுதியில் உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications