Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீதி முழுக்க ஓடிய ரத்தம்.. தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு.. 9 பேர் உயிரிழப்பு & பலர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் மிக மோசமான துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அங்குள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். அங்கு மதுபானக் கடைக்குள் புகுந்த மர்ம நபர் சரமாரியாகச் சுட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அங்கு நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் புறநகர்ப் பகுதியில் இன்று மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அருகே உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் உள்ளூர் நேரப்படி அதிகாலை நேரத்தில் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார்.

Johannesburg Tavern Mass Shooting Gunman Opens Fire in South Africa Killing 9 and Injuring 11 in Deadly Attack

அங்கிருந்த அனைவரையும் நோக்கி அந்த மர்ம நபர் தாறுமாறாகச் சுட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பலர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். இருப்பினும், அதற்குள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் தப்பித்துச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர். துப்பாக்கி சூட்டை நடத்தியவர்களைப் பிடிக்கும் பணிகளும் போலீசார் இறங்கியுள்ளனர்.

இந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+