ரஷ்யா கைக்கு போகும் பவர்.. கிம் ஜாங் உன் போட்ட உத்தரவு! மிரட்டி விடும் வடகொரியா!
பியாங்யாங்: உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்தும் ஏவுகணைகள் வடகொரியாவிலிருந்துதான் வருகின்றன. இந்நிலையில், இந்த ஏவுகணையின் உற்பத்தியை இரண்டரை மடங்காக அதிகரிக்க அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருக்கிறார்.
மிலிட்டர்னி பாதுகாப்பு ஊடகத்தின் அதிகாரப்பூர்வ செய்தியின்படி, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்தி வரும் அதிநவீன ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரிக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

கிம் ஜாங் உன் நாட்டின் முக்கிய ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலைக்கு நேரடிப் பார்வை மேற்கொண்டார். அப்போது, அங்கு தயாரிக்கப்படும் 'புல்சே-4' எனப்படும் அதிநவீன டேங்க்-எதிர்ப்பு ஏவுகணைகளின் தற்போதைய உற்பத்தி முறைகளில் சில குறைபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பொதுப் பணியாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, இந்த ஏவுகணைகளின் உற்பத்தித் திறனை உடனடியாக 2.5 மடங்கு வரை அதிகரிக்க அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை வடகொரியாவின் 'பியோங்யாங்' செய்தி நிறுவனமான KCNA உறுதி செய்திருக்கிறது.
இந்த 'புல்சே-4' ஏவுகணையானது, இஸ்ரேல் நாட்டின் புகழ்பெற்ற Spike-NLOS ஏவுகணையின் வடிவத்தை அப்படியே அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் வகையில் வடகொரியாவால் தயாரிக்கப்பட்ட ஒரு நகலாகும். வடகொரியாவின் உள்நாட்டு மின்னணுத் தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக இது இஸ்ரேலின் அசல் ஏவுகணையை விடத் தொழில்நுட்ப ரீதியாகக் கொஞ்சம் குறைவான திறன் கொண்டது என்றாலும், போர்க்களத்தில் மிக ஆபத்தானது என இராணுவ வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
வடகொரியா ஏற்கனவே இந்த புல்சே-4 ஏவுகணைகளை ரஷ்யாவிற்கு இரகசியமாக சப்ளை செய்துள்ளது. ரஷ்ய இராணுவம் இதனை உக்ரைன் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகப் போர்க்களத்தில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, M-2010 ரக கவச வாகனங்கள் மற்றும் எஸ்யூவி ரக வாகனங்களின் மீது இந்த ஏவுகணை அமைப்புகளைப் பொருத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த ஏவுகணையின் துல்லியமான விவரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், இது சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கக்கூடியது. இதில் 'எலக்ட்ரோ-ஆப்டிகல் சீக்கர்' மற்றும் 'ஃபைபர்-ஆப்டிக் கேபிள்' வழிகாட்டுதல் தொழில்நுட்பம் உள்ளது. இதன் மூலம், ஏவுகணை காட்டும் நேரடி வீடியோ காட்சியை வைத்துக்கொண்டு, ஆபரேட்டர் அதனைப் போர்க்களத்தில் உள்ள தடைகளைத் தாண்டி, கண்ணுக்குத் தெரியாத மறைவிடங்களில் இருக்கும் இலக்குகளையும் துல்லியமாகத் தாக்க வழிநடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications