பிரபுல் படேலுக்கு எதிர்ப்பு- லட்சத்தீவு பாஜகவில் பிளவு- லோக்சபா தேர்தலில் கிடைத்த 125 ஓட்டும் அம்போ!
கரவெட்டி: லட்சத்தீவுகளின் மத்திய அரசு நிர்வாகியான பிரபுல் கோடா படேலின் நடவடிக்கைகளுக்கு உள்ளூர் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனா லட்சத்தீவுகளில் பாஜக இரண்டாக பிளவுபட்டுள்ளது.
Recommended Video
லட்சத்தீவுகளில் மத்திய அரசு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்தவர் பிரபுல் படேல் (பிரபுல் பட்டேல்).

அடக்குமுறை
லட்சத்தீவுகளுக்கு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத வகையில் கடும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளார் பிரபுல் படேல். இதனால் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பாஜகவில் எதிர்ப்பு
லட்சத்தீவு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் கூட பிரபுல் படேலின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகத் தொடங்கி உள்ளன. லட்சத்தீவு பாஜக தலைவராக உள்ள அப்துல் காதர் ஹாஜ், பிரபுல் படேல் நடவடிக்கைக்கு ஆதரவாக உள்ளார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் லட்சத்தீவுகள் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 125 வாக்குகள் பெற்றவர்தான் இந்த அப்துல் காதர் ஹாஜி.

படேல் ஒரு சர்வாதிகாரி
ஆனால் மற்றொரு பாஜக தலைவரான அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹாசிம் உள்ளிட்டோர் பிரபுல் படேலின் நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்கின்றனர். பிரபுல் படேல் ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொள்வதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் பிரபுல் படேலுக்கு எதிராக பாஜக நிர்வாகிகள் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.

பாஜகவுக்கு சொற்ப ஓட்டுகள்
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக உள்ள லட்சத்தீவுகளில் மாட்டிறைச்சி தடை, குண்டர் சட்டம் அமல் போன்றவைதான் பெரும் கொந்தளிப்புக்கு காரணம். லட்சத்தீவு லோக்சபா தொகுதிகளில் பாஜக 200க்கும் குறைவான வாக்குகளைத்தான் இதுவரை பெற்றுள்ளது.

கேரளாவிலும் விழும் அடி
தற்போது மிக மோசமாக செயல்படுத்தப்பட்டும் இந்த நடவடிக்கைகளால் பாஜகவுக்குக் கிடைக்கக் கூடிய நூற்று சொச்சம் ஓட்டுகளுக்கும் பிரபுல் படேல் வேட்டுவைத்துவிட்டுதான் போவார் என குமுறுகின்றனர் பாஜகவினர். லட்சத்தீவுகளில் மட்டுமல்ல.. கேரளாவில் முட்டி மோதி காலூன்ற துடிக்கும் பாஜகவுக்கு இந்த நடவடிக்கைகள் மிக மோசமான பின்னடைவுதான் என்கின்றனர் அக்கட்சியின் மூத்த தலைவர்கள்.












Click it and Unblock the Notifications