லண்டனில் திகு திகுவென எரியும் 24 அடுக்குமாடி....6 பேர் பலி; 50 பேர் படுகாயம்!
லண்டனில் பற்றி எரியும் 24 மாடி கட்டட விபத்தில் சுமார் 6 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லண்டன் : லண்டனின் வடக்கு கென்சிங்ஸ்டன் பகுதியில் உள்ள கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல்கருகி உயிரிழந்த நிலையில் 50 பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு லண்டனின் கிரென்ஃபெல் டவர் 24 அடுக்குமாடிகளைக் கொண்டது. விண்ணை முட்டும் உயரத்தில் இருக்கும் இந்த கட்டடத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சுமார் 1 மணியளவில் 2வது தளத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து எளிதில் 24 மாடி முழுமைக்கும் மளமளவென பரவியது. தீயை பார்த்து பதறிய குடியிருப்பு வாசிகள் கரும்புகை மற்றும் தீக்கு மத்தியில் குழந்தைகளுடன் வெளியேறினர்.
ஒரு தளத்திற்கு 5 வீடுகள் வீதம் 120 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் சுமார் 500 பேர் வரை வசிக்கலாம் என்று தெரிகிறது.

அங்கேயும் விதிமீறலா?
1974ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டடம் கடந்த ஆண்டு ரூ.90 கோடி மதிப்பில் மறுபுனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. முன்எச்சரிக்கை வசதிகள் குறித்து ஏற்கனவே லண்டன் பத்திரிக்கைகள் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளன.

உதவிஎண் அறிவிப்பு
தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதனிடையே தொடர்ந்து எரியும் தீயால் அதிர்ச்சியடைந்தவர்கள், அந்த அடுக்குமாடியில் குடியிருந்தவர்களின் நிலை குறித்து தகவல் கேட்டு வருகின்றனர். இவர்களின் வசதிக்காக லண்டன் மேயர் சாதிக் கான் சிறப்பு அவசர கால உதவி எண்ணை அறிவித்துள்ளார்.

50 பேர் அனுமதி
இந்நிலையில் தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே எத்தனை பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் தெரிய வரும். எனினும் முதற்கட்ட தகவல்படி 6 உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை தீக்காயங்களுடன் சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
|
அப்புறப்படுத்தல்
விடாமல் எரிந்து வரும் 24 மாடி கட்டடம் எந்த நேரம் இடிந்து விழக்கூடும் என்ற நிலையில் உள்ளது. தற்போது பாதுகாப்பு கருதி அருகில் உள்ள கட்டடங்களில் இருந்தும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications