ரஷ்யாவின் மிகப் பெரிய அலுமினிய சுத்திகரிப்பு ஆலையின் அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ரஷ்யாவின் மிகப் பெரிய அலுமினிய சுத்திகரிப்பு ஆலையின் அனல் மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் அசின்ஸ்க் நகரில் அந்த நாட்டின் மிகப் பெரிய அலுமினிய சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. உலகின் 2-வது மிகப் பெரிய அலுமினிய சுத்திகரிப்பு நிறுவனமான RUSAL-க்கு சொந்தமானது இந்த ஆலை.

இந்த ஆலையில் அனல்மின் நிலையம் ஒன்றும் செயல்பட்டு வந்தது. இங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல அடி உயரத்து தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து வீடியோக்களை உள்ளூர் பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications