ஹிட்லரை ஏமாற்றி தப்பியவர்.. ஆஸி., பயங்கரவாத தாக்குதலில் பலி.. மனைவியை காக்க முயன்று இறந்தார் சோகம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் பாண்டி கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா திருவிழாவின்போது பாகிஸ்தானை சேர்ந்த தந்தை - மகன் உள்ளே நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 15 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 87 வயது நிரம்பிய அலெக்ஸ் கிளெயிட்மேன் பலியாகி உள்ளனர். இவர் 2ம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் இனப்படுகொலையில் இருந்து தப்பிய நிலையில் பயங்கரவாத தாக்குதலில் மனைவியை காக்க நினைத்து பலியாகி உள்ளார். அவரை பற்றிய கலங்க வைக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல நடந்தது. யூத மக்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் ‛ஹனுக்கா' என்ற பெயரில் திருவிழா கொண்டாடப்படும். கிரேக்கர்களின் அடக்குமுறையை வென்றதை குறிக்கும் வகையில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் யூத மக்கள் சார்பில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டபோது தான் இந்த தாக்குதல் அரங்கேறியது. துப்பாக்கியுடன் நுழைந்த 2 பேர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 15 பேர் பலியாகினர். 40 பேர் வரை காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டான்.
விசாரணையில் பாகிஸ்தானை சேர்ந்த 50 வயதான நவீத் அக்ரம் மற்றும் அவரது 24 வயதான மகன் சஜித் அக்ரம் ஆகியோர் தான் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரியவந்தது. இதில் நவீத் அக்ரம் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டான். சஜித் அக்ரம் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ஐஎஸ் பயங்கராத தாக்குதல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ‛ஹனுக்கா' கொண்டாட்டத்தில் பங்கேற்கும் யூதர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதும் உறுதியானது.
இதற்கு யூதர்களின் நாடான இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா யூத வெறுப்பை காட்டி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என்று இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில் தான் பாண்டி கடற்கரையில் இறந்தவர்கள் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தாக்குதலில் 87 வயது நிரம்பிய அலெக்ஸ் கிளெயிட்மேன் என்பவர் பலியாகி உள்ளார். ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய ஹோலோகோஸ்த் என அழைக்கப்படும் இனப்படுகொலையில் இருந்து தப்பிய அவர் இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ள நிலையில் அவரை பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
ஹோலோகாஸ்ட் படுகொலை என்பது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நடந்தது. 1941ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நாசி படைகள் ஐரோப்பியாவில் வாழும் யூதர்களை குறிவைத்து கொன்றது.மொத்தம் 60 லட்சம் பேரை படுகொலை செய்தது. இதனை ஹோலோகாஸ்ட் படுகொலை என அழைக்கின்றனர்.
இந்த படுகொலையில் இருந்து தான் அலெக்ஸ் கிளெயிட்மேன் தப்பினார். சைபீரியாவில் இருந்த அவர் ஹிட்லரின் நாசி படையால் பிரச்சனையை எதிர்கொண்டார். ஹிட்லரிடம் இருந்து தப்பிய யூதர்கள் பல நாடுகளில் தஞ்சமடைந்தனர். அலெக்ஸ் கிளெயிட்மேன் உக்ரைனில் தஞ்சமடைந்தார். உக்ரைனில் இருந்து அவர் தனது மனைவி லாரிசாவுடன் ஆஸ்திரேலியாவில் குடியேறினார். லாரிசாவும் ஹிட்லரின் ஹோலேகால்த் படுகொலையில் இருந்து தப்பியவர் தான்.
இந்நிலையில் தான் சம்பவத்தன்று அலெக்ஸ் தனது மனைவி லாரிசா, பேரக்குழந்தைகள் உள்பட பிற குடும்ப உறுப்பினர்களுடன் பாண்டி கடற்கரைக்கு சென்று ‛ஹனுக்கா'திருவிழாவில் பங்கேற்றார். அப்போது தான் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் அவர் பலியானார். துப்பாக்கிச்சூடு நடந்தபோது அவரது குடும்பத்தினர் அனைவரும் தரையில் படுத்தனர். அலெக்ஸ் கிளெயிட்மேனும் தரையில் படுத்தார். ஆனால் அவரை விட்டு மனைவி லாரிசா சிறிது தூரத்தில் படுத்து கிடந்தார். இதனால் மனைவிக்கு ஏதாவது ஆகிவிடும் என்று அவர் அருகே அலெக்ஸ் கிளெயிட்மேன் சென்றபோது குண்டு பாய்ந்து அவர் பலியானார்.
இதனால் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி மனைவி லாரிசா கூறுகையில், ‛‛என் கணவர் அலெக்ஸ் கிரெயிட்மேன் என்னை பாதுகாக்க நினைத்தபோது துப்பாபக்கி குண்டு பாய்ந்து இறந்துவிட்டார்'' என அழுதார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications