காஸ்ட்ரோ நல்லாருக்கார், எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.. மரடோனா தகவல்
ஹவானா: கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ நலமுடன் இருப்பதாக தனக்கு கடிதம் எழுதி இருப்பதாக அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா தெரிவித்துள்ளார்.
கியூபா அதிபராக இருந்த காஸ்ட்ரோ, கடந்த ஓராண்டு காலமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. சமீப காலமாக அவரது கட்டுரைகள் எதுவும் செய்தித்தாள்களில் வெளிவரவில்லை. இதனால், 89 வயதான பிடல் காஸ்ட்ரோ, உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்து பரவியது.

இதனை மறுத்துள்ள கியூபா அரசு, இது போன்ற வதந்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. முதுமை காரணமாகவே ஃபிடல் காஸ்ட்ரோ கட்டுரைகளை எழுதுவதில்லை என கியூபா விளக்கமளித்தது.
இந்நிலையில், வெனிசுலா தொலைக்காட்சி ஒன்றிற்கு அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ‘பிடல் காஸ்ட்ரோ தனக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாகவும், அதில் அவர் தான் ஆரோக்கியமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பேட்டியின் போது காஸ்ட்ரோ எழுதிய கடிதத்தையும் மக்களுக்கு காட்டினார் மரடோனா. அதைக் காட்டி பேசிய மரடோனா, இதோ பாருங்கள் காஸ்ட்ரோ கையெழுத்திட்டுள்ளார் என்றார் மரடோனா.












Click it and Unblock the Notifications