சிட்னி பிணைக்கைதிகள் குறித்த தகவலுக்கு... அவசர உதவி எண்ணை அறிவித்தது இந்திய தூதரகம்
சிட்னி : சிட்னி ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகளால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல்களைப் பெற இந்தியத் தூதரகம் இலவச தொலைபேசி எண் ஒன்றை அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்ட்டின் பிளேஸ் பகுதியில் உள்ள லின்ட் சாக்கலேட் கேஃப் என்ற ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து, அங்கிருந்த பொதுமக்களை சிறைப்பிடித்துள்ளனர். மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி என சந்தேகிக்கப்படும் கொடியையும் அவர்கள் பறக்க விட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் பிடியில் இருந்து 5 பேர் இதுவரைத் தப்பி வந்துள்ளனர். ஹோட்டல் வளாகத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியாவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், பிணைக்கைதிகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இந்திய தூதரகம் இலவச தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. அதில், +61481453550 மற்றும் 0061 419687008 என்ற இரண்டு எண்களில் தொடர்பு கொண்டு, தற்போதைய நிலவரம் உள்ளிட்ட தகவல்களை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள பயங்கரவாதிகள், அவர்களுக்கு எவ்வித தொல்லையையும் கொடுக்கவில்லை என்றும், தாக்கவில்லை என்றும் நியூசவுத்வேல்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பயங்கரவாதிகளில் ஒருவனை போலீசார் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவன் மூலம் பேச்சுவார்த்தை நடத்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications