ஜெர்மனி அரசு மட்டும் எச்சரித்திருந்தால் உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்காது
பெர்லின்: கிழக்கு உக்ரைன் வான்வெளியில் பறக்கும் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று ஜெர்மனி அரசுக்கு தகவல் கிடைத்தும் அது யாரையும் எச்சரிக்காமல் விட்டதால் தான் மலேசிய விமானம் சுட்டுத் தள்ளப்பட்டது என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பியது. விமானம் கிழக்கு உக்ரைனில் பறந்தபோது பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதில் அதில் இருந்த 298 பேரும் உடல் சிதறி பலியாகினர். விமானத்தை உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப்படையினர் தான் சுட்டு வீழ்த்தினர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெர்மனி ஊடகங்களில் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கிழக்கு உக்ரைன் வழியாக பறக்கும் அனைத்து விமானங்களுக்கும் ஆபத்து என்று ஜெர்மனி அரசுக்கு அந்நாட்டு உளவுத்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அரசோ எந்த விமான நிறுவனத்திற்கும் இந்த தகவலை அளிக்கவில்லை.
ஜெர்மனி அரசு மட்டும் தனக்கு கிடைத்த தகவலை அனைவருடனும் பகிர்ந்திருந்தால் மலேசிய விமானம் கிழக்கு உக்ரைன் வழியாக சென்றிருக்காது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜூலை 17ம் தேதி ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்ஸா நிறுவனத்தின் 3 விமானங்கள் கிழக்கு உக்ரைன் வழியாக சென்றுள்ளன.
இது குறித்து லுப்தான்ஸாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,
எங்கள் நிறுவனத்திற்கு அரசு உக்ரைன் பற்றி முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நாங்கள் அந்த வழியாக விமானங்களை இயக்கி இருக்கவே மாட்டோம் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications