பறிபோன இந்திய உயிர்கள்.. ஈரான் தாக்குதலில் கேப்டன் ஆஷிஷ் உட்பட இருவர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்
தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் தாக்கியதில் ஸ்கைலைட் எண்ணெய் கப்பலில் கடும் சேதம் அடைந்திருந்தது. இதற்கிடையே அந்த கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் இருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த போர் 6வது நாளாக இன்றும் தொடர்கிறது. நாளுக்கு நாள் இந்த போர் தொடர்ந்து விரிவடைந்து வரும் சூழலில், அங்கு ஒரு பிராந்திய போர் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மிக மோசமான ஒரு பதற்றம் நிலவி வருகிறது.

போர்
இஸ்ரேல்- அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் முழு வீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேலை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல மத்திய கிழக்கில் பல்வேறு நாடுகளிலும் அமெரிக்காவுக்குச் சொந்தமான படைகள் உள்ள நிலையில், அந்த படைகள் மீதும் ஈரான் சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. அந்த ஜலசந்தி வழியாக எந்தவொரு கப்பல் வந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் அறிவித்துள்ளது. அதன்படியே தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. அப்படி தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியின் அருகே ஓமன் வளைகுடா பகுதியில் முசண்டம் கடற்கரையில் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதில் அங்கிருந்த எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்தது. ஸ்கைலைட் என்ற இந்த எண்ணெய் கப்பலில் மொத்தம் 20 பேர் இருந்துள்ளனர். அதில் 15 பேர் இந்தியர்கள் என்றும் 5 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியானது. முதலில் அவர்கள் நிலை என்னவென்றே தெரியாமல் இருந்தது. பிறகு அவர்கள் மீட்கப்பட்ட நிலையில், அதில் படுகாயமடைந்தோருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஸ்கைலாட் எண்ணெய் கப்பல்
ஸ்கைலாட் என்ற எண்ணெய் டேங்கர் பலாவு நாட்டின் கொடியுடன் இயங்கும் கப்பலாகும். மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மைக்ரோனேசியா என்ற பகுதியில் உள்ள தீவு நாடான பாலவு நாட்டின் கொடியுடன் இயங்கிய எண்ணெய் டேங்கரை தான் ஈரான் சுட்டு வீழ்த்தி இருக்கிறது.
உயிரிழப்பு
இதற்கிடையே ஸ்கைலைட் எண்ணெய் கப்பலைச் சேர்ந்த காணாமல் போன இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். கேப்டன் ஆஷிஷ் குமார் உட்பட இருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன?












Click it and Unblock the Notifications