Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பறிபோன இந்திய உயிர்கள்.. ஈரான் தாக்குதலில் கேப்டன் ஆஷிஷ் உட்பட இருவர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் தாக்கியதில் ஸ்கைலைட் எண்ணெய் கப்பலில் கடும் சேதம் அடைந்திருந்தது. இதற்கிடையே அந்த கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் இருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த போர் 6வது நாளாக இன்றும் தொடர்கிறது. நாளுக்கு நாள் இந்த போர் தொடர்ந்து விரிவடைந்து வரும் சூழலில், அங்கு ஒரு பிராந்திய போர் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மிக மோசமான ஒரு பதற்றம் நிலவி வருகிறது.

Middle east Tension Two including Captain Ashish lost their life as Iranian Hits SKYLIGHT Tanker

போர்

இஸ்ரேல்- அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் முழு வீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேலை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல மத்திய கிழக்கில் பல்வேறு நாடுகளிலும் அமெரிக்காவுக்குச் சொந்தமான படைகள் உள்ள நிலையில், அந்த படைகள் மீதும் ஈரான் சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. அந்த ஜலசந்தி வழியாக எந்தவொரு கப்பல் வந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் அறிவித்துள்ளது. அதன்படியே தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. அப்படி தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியின் அருகே ஓமன் வளைகுடா பகுதியில் முசண்டம் கடற்கரையில் ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதில் அங்கிருந்த எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்தது. ஸ்கைலைட் என்ற இந்த எண்ணெய் கப்பலில் மொத்தம் 20 பேர் இருந்துள்ளனர். அதில் 15 பேர் இந்தியர்கள் என்றும் 5 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியானது. முதலில் அவர்கள் நிலை என்னவென்றே தெரியாமல் இருந்தது. பிறகு அவர்கள் மீட்கப்பட்ட நிலையில், அதில் படுகாயமடைந்தோருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஸ்கைலாட் எண்ணெய் கப்பல்

ஸ்கைலாட் என்ற எண்ணெய் டேங்கர் பலாவு நாட்டின் கொடியுடன் இயங்கும் கப்பலாகும். மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மைக்ரோனேசியா என்ற பகுதியில் உள்ள தீவு நாடான பாலவு நாட்டின் கொடியுடன் இயங்கிய எண்ணெய் டேங்கரை தான் ஈரான் சுட்டு வீழ்த்தி இருக்கிறது.

உயிரிழப்பு

இதற்கிடையே ஸ்கைலைட் எண்ணெய் கப்பலைச் சேர்ந்த காணாமல் போன இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். கேப்டன் ஆஷிஷ் குமார் உட்பட இருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+