உத்தரகாண்ட்: உத்தர்காசியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்- வல்லுநர்கள் வார்னிங் அப்படியே நடக்குதோ?
உத்தரகாண்ட் மாநிலம் மீண்டும் நிலநடுக்க அதிர்வுகளை எதிர்கொண்டிருக்கிறது.
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் நேற்றும் இன்று அதிகாலையும் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த மிதமான நிலநடுக்க அதிர்வுகளால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்களுக்கு இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என்கின்றன தகவல்கள்.
துருக்கி, சிரியாவில் பேரழிவை ஏற்படுத்தியது பெரும் நிலநடுக்கம். துருக்கி, சிரியாவை உருக்குலைத்த இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50,000க்கும் அதிகமானோர் மரணம் அடைந்தனர். இரு நாடுகளின் நிலநடுக்கத்தால் பல லட்சக்கணக்கானோர் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். சர்வதேச நாடுகள் இருநாடுகளிலும் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் தொடர்ந்து நில நடுக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அதிக நிலநடுக்கங்களை எதிர்கொண்டிருக்கின்றன. நமது நாட்டிலும் பல மாநிலங்களில் தொடர்ந்து நில நடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக ஆய்வு செய்த தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி என். பூர்ண சந்திர ராவ் எச்சரிக்கை, நிலநடுக்கங்கள் ஏற்படக் காரணமானவை கண்டத் தட்டுகள் நகருதல்தான். இந்திய கண்டத் தட்டு அல்லது டெக்டானிக் பிளேட் என்பது ஆண்டுக்கு 5 செ.மீ. நகர்ந்து கொண்டே இருக்கிறது. இது இந்தியாவில் மிகப் பெரிய நிலநடுக்கத்துக்கான சாத்தியங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. இமயமலையில் நேபாளத்தின் வடக்கு மற்றும் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலம் இடையே பெரும் இடைவெளி உருவாகி கொண்டிருக்கிறது. இது உத்தரகாண்ட்டில் மிக மோசமான நிலநடுக்க பாதிப்பை எந்த நேரத்திலும் ஏற்படுத்தும் என கூறியிருந்தார்.
விஞ்ஞானிகள் கூறியபடியே உத்தரகான்ட் மாநிலத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. உத்தர்காசி பகுதியில் நேற்றும் இன்றும் 4 முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 2.0 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்கின்றன தகவல்கள்.
கடந்த வாரம் கூட உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவாகி இருந்தது. உத்தரகாண்ட் நிலநடுக்கத்தால் டெல்லி, ஹரியானா, உ.பி. என வட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications