60 பயணிகளுடன் மாயமான விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டறியப்பட்டது: இந்தோனேசியா
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்டு நடுவானில் 60 பயணிகளுடன் திடீரென மாயமான ஶ்ரீவிஜயா விமானம் விழுந்து நொறுங்கியதாக சந்தேகிக்கப்படும் இடத்தை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் ஶ்ரீவிஜயா விமான சேவை 2003-ல் தொடங்கப்பட்டது. இந்தோனேசியாவின் உள்நாட்டு விமான சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வந்தது.

4 நிமிடங்களில் மாயம்
இந்த நிலையில் ஜகார்த்தாவின் சொகர்னோ-ஹட்டா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 4 நிமிடங்களிலேயே நடுவானில் 10,000 அடி உயரத்தில் திடீரென 60 பயணிகளுடன் ஶ்ரீவிஜயா மாயமானது. இதனையடுத்து விமானத்தைத் தேடும் பணிகள் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

தேடுதல் பணி
ஜகர்த்தா வடக்கே கடலோரம் விமான சிதைவுகள் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்த் தகவலைத் தொடர்ந்து அங்கு தேடுதல் பணிகள் விடியவிடிய நடைபெற்றன. ஆனால் எந்தவிதமான உறுதியான தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது அந்த பகுதி முழுவதும் இந்தோனேசிய கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

2-வது நாளாக மீட்பு பணிகள்
இதேபோல் ஜகார்த்தாவின் தவுசண்ட் ஐலேண்ட்ஸ் மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் பயங்கர சப்தம் கேட்டதாக அப்பகுதி ஆதிகுடிகள் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. நள்ளிரவில் நிறுத்தப்பட்ட தேடல் இன்றும் 2-வது நாளாக தொடருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பில் சிக்கியவை விமான பாகங்கள்?
இதனிடையே விமானம் விழுந்து நொறுங்கிய இடம் கண்டறியப்பட்டுள்ளது எனவும் கடலில் இருந்து மீட்கப்பட்ட பாகங்கள் விமானத்தின் சிதைவுகளாக இருக்கலாம் எனவும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications