ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி!
டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை குறி வைத்து, ஈரான் சராமாரியாக ஏவுகணைகளை வீசியது. இதிலிருந்து, ஈரான் பிரதமர் தப்பியிருக்கிறார். மட்டுமல்லாது ஏவுகணை தாக்கிய இடத்திலிருந்து, செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், பஹ்ரைன், சவுதி உள்ளிட்ட நாடுகளுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

போர் பகுதியில் நெதன்யாகு
இப்படி இருக்கையில், இஸ்ரேலின் பீட் ஷெமேஷ் பகுதியில், ஈரானியத் தாக்குதலில் சேதமடைந்த உள்ள ஒரு யூத ஆலயத்திலிருந்து பேட்டியளித்த நெதன்யாகு, மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். தாக்குதல் நடந்த இடத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் நெதன்யாகு, இந்த நன்றியைத் தெரிவித்தார்.
மோடிக்கு நன்றி
"என் சிறந்த நண்பரான பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று நீண்ட நேரம் பேசினேன். இஸ்ரேலுக்கு துணையாக நின்றதற்காகவும், உண்மைக்கு ஆதரவாகவும், இந்திய மக்களின் பெரும் நட்புக்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்தேன். இந்தியர்கள் இஸ்ரேலில் மிகவும் மதிக்கப்பட்டு நேசிக்கப்படுகிறார்கள். நான் மோடியிடம் பேசிய உரையாடலின் விவரங்களை வெளியிடப் போவதில்லை. ஆனால், அவரிடமும் பிற பிராந்தியத் தலைவர்களிடமும் பேசினேன்" என்று கூறியிருக்கிறார்.
இந்தியா-இஸ்ரேல் உறவு
இரு தலைவர்களுக்கும் இடையே தனிப்பட்ட வகையில் நல்லுறவு இருந்து வருகிறது. வர்த்தகம், பாதுகாப்பு, மக்கள் தொடர்புகள் எனப் பல துறைகளிலும் இந்தியா-இஸ்ரேல் இடையே ஆழமான உறவுகள் உள்ளன.
ஈரானில் ஆட்சி மாற்றம்
ஈரானிய மக்கள், தங்கள் ஆட்சியாளர்களை நீக்குவதற்கான சூழலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கூறிய நெதன்யாகு, "அந்த நாள் வெகு விரைவில் வரும். இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானிய மக்களுடன் இருக்கும். ஈரானிய மக்கள் எங்களுடன் இருப்பது மிகவும் முக்கியம். ஆட்சி மாற்றம் அவர்களைப் பொறுத்தது; நாங்கள் உறுதுணையாக இருப்போம்" என கூறியுள்ளார்.
தாக்குதல்கள் ஆரம்பித்ததிலிருந்து, ஈரானிய மக்கள் கொடுங்கோன்மையின் பிடியில் இருந்து விடுபடுமாறு நெதன்யாகு வலியுறுத்தி வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உங்கள் நாட்டை மீட்டெடுங்கள் என்று வலியுறத்தியுள்ளார்.
-
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications