யு.எஸ்.-ல் ஒபாமா உட்பட 12 நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்
நியூயார்க்: ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஒபாமா உட்பட 12 நாட்டு தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார்.
பிரதமர் மோடி அயர்லாந்து பயணத்தை நிறைவு செய்துவிட்டு இன்று நியூயார்க் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

பிரதமர் மோடியின் அமெரிக்கா பயணம் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் அருண் கே சிங் கூறுகையில், அமெரிக்கா அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி வரும் 28-ந் தேதி சந்தித்து பேசுகிறார். இருநாட்டு தலைவர்களிடையே நிகழும் 3வது சந்திப்பு இது.
இச்சந்திப்பில் சர்வதேச அரசியல் நிலவரங்கள், இருதரப்பு வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன என்றார். இருப்பினும் பிரதமர் மோடி- ஒபாமா சந்திப்பு எங்கே நடைபெறும் என தெரிவிக்கப்படவில்லை.
இதேபோல் பிரான்ஸ், ஜோர்டான், பூடான், மெக்சிகோ, ஸ்வீடன், கத்தார், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். ஜி 4 நாடுகள் உச்சி மாநாட்டின் போது ஜப்பான் பிரதமர் மற்றும் ஜெர்மன் அதிபர் மற்றும் பிரேசில் அதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பிரதமர் மோடி சந்தித்து பேசமாட்டார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் சிலிக்கான்வேலியில் செப்டம்பர் 27-ந் தேதியன்று அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அத்துடன் ஃபேஸ்புக் தலைமையகம் செல்கிறார். மேலும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.












Click it and Unblock the Notifications