மாஸ்கோ: பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர், போலீஸை சுட்டுக் கொன்ற மாணவன்! பிணைக் கைதியாக 20 மாணவர்கள்!!
மாஸ்கோ: ரஷியா தலைநகர் மாஸ்கோவில் பள்ளிக்கூடம் ஒன்றில் நுழைந்த மாணவர் ஆசிரியர் மற்றும் போலீஸை சுட்டுக் கொன்றுவிட்டு 20 மாணவர்களை பிணைக் கைதியாக்கினான்.
ரஷியாவில் 2004ஆம் ஆண்டு வடக்கு ஒஸ்ஸெடியா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் ஆயுதமேந்திய பாதுகாவலர்களை நியமிக்க அந்நாட்டு அரசு சட்டம் இயற்றியது.

இந்நிலையில் இன்று காலை தலைநகர் மாஸ்கோவின் வடகிழக்குப் பகுதியில் பள்ளிக் கூடம் ஒன்றில் துப்பாக்கியுடன் உயர்நிலைப் பள்ளி மாணவன் நுழைந்திருக்கிறான். அங்கு பாதுகாப்புக்கு நின்ற பாதுகாவலை துப்பாக்கி முனையில் மிரட்டிவிட்டு உள்ளே நுழைந்திருக்கிறான்.
இந்த தகவல் உடனேயே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்குள் உயிரியல் பாட வகுப்புக்குள் நுழைந்த அந்த மாணவன் மொத்தம் 20 மாணவர்களை பிணைக் கைதிகளாக்கிக் கொண்டான். அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் உயிரியல் பாட ஆசிரியரை நோக்கி கண்மூடித்தனமான சுட்டுள்ளான்.

இதில் ஒரு போலீஸ்காரரும் ஆசிரியரும் உயிரிழந்துவிட்டனர். மற்றொரு போலீஸ்காரர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். பின்னர் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் பிணைக் கைதியாக இருந்த மாணவர்களை மீட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து மாணவன் ஒருவனே துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications