Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

9வது மாடி பால்கனியில் மும்முர உறவு.. வேகத்தில் தடுமாறி நிர்வாண கோலத்தில் கீழே விழுந்த ஜோடி

பெட்ரூமில் உறவில் ஈடுபடாமல் ஒரு திரில்லிற்காக அந்தரத்து மொட்டை மாடியில் ஆர்வக்கோளாறில் உறவில் ஈடுபட்ட ஜோடி ஒன்று ஆடையின்றி நிர்வாணமாக தவறி விழுந்தனர். இதில் பெண் மீது ஆண் வேகமாக விழுந்ததில் அந்த பெண்

Subscribe to Oneindia Tamil

செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் : தாம்பத்ய உறவில் ஈடுபட ஆசைப்பட்டால் படுக்கை அறைதான் சரியான சாய்ஸ். சிலரோ படுக்கை அறையை தாண்டி ஒரு திரிலுக்காக சமையல் அறை, பாத்டப், பாத்ரூம் என பல இடங்களில் முயற்சி செய்வார்கள். அப்படி ஆசை ஆசையாக ஒன்பதாவது மாடி பால்கனியில் உறவில் ஈடுபட்ட ஜோடி ஒன்று நிலைதடுமாறி நிர்வாணமாக விழுந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இளம்பெண் தலை சிதறி உயிரிழந்து விட்டார். அந்த இளைஞரோ காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ரஷ்யாவில் இந்த ரணகளமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பார்ட்டியில் பங்கேற்க வந்த போது காதல் மோகத்தில் ஒன்பதாவது மாடியில் உல்லாசமாக உறவில் ஈடுபட்டு விழுந்து உயிரை விட்டுள்ளார் அந்தப்பெண். நிர்வாண நிலையில் அந்த ஜோடியைப் பார்த்து அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நிலையில் இருக்கின்றனர் அவர்களின் நண்பர்கள்.

உல்லாசமே வினையானது

உல்லாசமே வினையானது

செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதவது மாடியில் இருந்து இரண்டு பேர் தவறி விழுந்ததை பிளாட்பாரங்களில் நடந்து சென்றவர்கள் பார்த்தனர். அருகில் சென்று பார்த்த போது ஆண் பெண் இருவரும் நிர்வாணமாக இருந்தனர். யார் இவர்கள், எங்கிருந்து இப்படி விழுந்தனர் என்று ஆராய்ச்சி செய்யவெல்லாம் நேரமில்லை, உடனடியாக ஆம்புலன்ஸ்சுக்கும் போலீசுக்கும் தகவல் சொன்னார்கள்.

பலாத்கார கொலையா

பலாத்கார கொலையா

ஆம்புலன்ஸ் வந்து இருவரையும் அள்ளிக்கொண்டு போனது போகும் வழியிலேயே அந்த இளம் பெண் உயிரிழந்து விட்டார். ஆணுக்கு ஐசியுவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் பொதுமக்களுக்கு எதுவும் தெரியவில்லை, பலாத்காரம் செய்து அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு கொலை செய்திருக்கலாமோ என்று முதலில் போலீசார் சந்தேகப்பட்டனர். அவர்கள் கீழே விழுந்த மாடியின் அறையில் இருந்த டிவியும் உடைக்கப்பட்டிருந்தது. பிறகுதான் இருவருமே காதலர்கள் என்றும் உறவில் ஈடுபடும் போது தடுமாறி விழுந்தது தெரியவந்தது.

பார்ட்டியில் ரணகலம்

பார்ட்டியில் ரணகலம்

அந்த பிளாட்டில் சிறிய பார்ட்டி நடந்துள்ளது. அதற்காக தனது நண்பரையும் காதலியையும் வரவழைத்த அந்த நபர், உற்சாக மிகுதியில் உறவில் ஈடுபட்டிருக்கிறார்கள். பால்கனியில் உறவில் ஈடுபட்டபோதுதான் அந்த துயரச்சம்பவம் நிகழ்துள்ளது. அந்த பெண் தடுமாறி விழ கூடவே அவள் மீது அந்த இளைஞனும் விழுந்தான். அந்த பெண்தான் ரத்த வெள்ளத்தில் தலை நொறுங்கி செத்துப்போனார்.

காயங்களுடன் சிகிச்சை

காயங்களுடன் சிகிச்சை

பிளாட்டில் இருந்தவர்களுக்கு இதை தெரிவிக்க உடன் இருந்தவர்கள் டிவியை தூக்கி வீசி கவனத்தை கவர்ந்துள்ளனர். நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் விடுபடவில்லை. சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணின் காதலர் வாயை திறந்து சொன்னால் மட்டுமே என்ன நடந்தது எப்படி தடுமாறி விழுந்தார்கள் என்பது தெரியவரும். ஆசை ஆசையாய் அதுக்கு ஆசைப்பட்டு அந்த பெண் கடைசியில் உயிரிழந்து விட்டார் என்பதுதான் சோகம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+