சூதாட்ட புகார்: அமெரிக்கக் கடற்படை துணைத்தளபதி பதவியிறக்கம்
வாஷிங்டன்: அமெரிக்கக் கடற்படை துணைத் தளபதி டிம்மோத்தி ஜியார்டினா, சூதாட்ட விவகாரத்தில் சிக்கி பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் அணு ஆயுதப் படைப் பிரிவை மேற்பார்வை பார்த்து வரும் முக்கியப் பொறுப்பில் இருந்துவந்தவர் டிம்மோத்தி ஜியார்டினா. தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து இவரை நீக்கியுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதிகளில் 2வது நிலையில் இருந்து வந்தவர் டிம்மோத்தி. இவர் மீது சட்டவிரோதமாக சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அவரை பதவியிறக்கம் செய்துள்ளனர். தற்போது டிம்மோத்தி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அயோவா காசினோவில் இவர் சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. இவர் தற்போது 2 ஸ்டார் கொண்ட அட்மிரலாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை அமெரிக்கக் கடற்படை செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஜான் கிர்பி தெரிவித்தார்.
நீர்மூழ்கிக் கப்பலில்அதிகாரியாக தனதுப் பணியைத் தொடங்கியவர் டிம்மோத்தி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications