நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க நேபாள அதிபர் ஒப்புதல்.. தற்காலிகமாக தப்பினார் பிரதமர் ஒலி!!
காத்மாண்டு: நேபாள நாட்டின் நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க அந்த நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து பிரதமர் கேபி சர்மா ஒலி தற்காலிகமாக தப்பித்துள்ளார்.
நேபாளம் நாட்டை நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த நாட்டின் பிரதமராக கேபி சர்மா ஒலி இருந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், நடப்பு நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தை ரத்து செய்யுமாறு அதிபருக்கு அமைச்சரவைக் கூட்டம் பரிந்துரை செய்து இருந்தது. இதற்கு முன்னதாக அதிபர் பண்டாரியை இரண்டு முறை பிரதமர் ஒலி சந்தித்து இருந்தார்.
பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு இந்தியா மறைமுக வேலைகளில் ஈடுபட்டு வருகிறது என்று பிரதமர் ஒலி கடந்த ஞாயிற்றுக் கிழமை குற்றம்சாட்டி இருந்தார். எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எப்படி இந்தியா மீது குற்றம்சாட்டலாம் என்று நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒலி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தஹல், மாதவ் நேபாள், ஜலந்த கனல், பாம்தேவ் கவுதம் ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர்.

நிலைக்குழுவின் எதிர்ப்பு
கட்சியின் நிலைக்குழு கமிட்டியில் இருக்கும் 44 உறுப்பினர்களும் கட்சித் தலைவராக இருக்கும் புஷ்ப கமல் தஹலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இறுதியாக நடந்த நிலைக்குழு கமிட்டிக் கூட்டத்தில் 44 உறுப்பினர்களில் 31 உறுப்பினர்கள் ஒலிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் பிரதமராக ஒலி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூட்டம் முடித்து வைப்பு
இந்த நிலையில் தற்போது நடந்து கொண்டு இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு அமைச்சரவை பரிந்துரை செய்தது. இதை அதிபர் பண்டாரி ஏற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க அதிபர் ஒப்புதல் வழங்கி இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஒலிக்கு இல்லை. கட்சிக்குள் சிக்கல் எழுந்தாலும், உறுப்பினர்களைப் பிரித்து அவரால் தனிக்கட்சி துவக்குவதற்கு ஏதுவாக, சிறப்பு சட்டத்தை கொண்டு வந்து அமல்படுத்த முடியும்.

வரைபடத்தால் பிரச்சினை
இந்தியப் பகுதிகளான காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகியப் பகுதிகளை தங்களது பகுதிகளுடன் இணைந்து நேபாளம் சமீபத்தில் வரைபடம் வெளியிட்டு அதை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றியது. இந்த வரைபடத்தை நிறைவேற்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை வறுபுறுத்தி நிறைவேற்றினார் ஒலி. நிறைவேற்றிய வேகத்தில் அவருக்கு அழுத்தமும், நெருக்கடியும் எழுந்துள்ளது.

2018 முதல் ஒலி
இதையடுத்து, 2018ல் மாவோயிஸ்ட் கட்சிக்கு தலைமை வகித்து வந்த புஷ்ப கமல் தனது கட்சியை நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைத்தார். கட்சிக்கு புஷ்ப கமல் தலைமை வகித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற ஒலி பிரதமரானார். தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவுக்கு எதிரான குரலை எழுப்பினார். இவரது எதிர்ப்பு நேபாளத்தில் எரிவாயுப் பொருட்கள், அன்றாட அத்தியாவசியப் பொருட்கள், மருந்துக்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது. இந்தப் பொருட்களுக்கு இந்தியாவை நேபாளம் நம்பியிருந்தது.

சீனாவால் வந்த வினை
ஆட்சிக்கு வந்த பின்னர் முழுவதும் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு, சீனாவுடன் ஒலி கைகோர்த்தார். இதனால், சீனாவில் இருந்து நிதி குவிந்தது. சாலை அமைக்க சீனா உதவியது. நேபாளத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணமும் மேற்கொண்டு இருந்தார். இந்தியாவுக்கு எதிரான, சீனாவுக்கு ஆதரவான நடவடிக்கைகளால் மீண்டும் ஒலிக்கு சிக்கல் எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications