கடைசி நிமிடத்தில் திரும்ப கிடைத்த லாட்டரி- ரூ.300 கோடி வென்ற நைஜீரிய தம்பதி

Subscribe to Oneindia Tamil

Nigerian Couple in Canada win $50 Million via Lottery – Almost Lost It!
டொராண்டோ: நைஜீரியாவில் ரூபாய் 300 கோடி மதிப்பிலான லாட்டரி சீட்டை தொலைத்த தம்பதி கடைசி நேரத்தில் பரிசு தொகையை பெற்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்தவர் ஹகீம்நோசிரு. இவரது மனைவி அபியோலா. இவர்கள் கனடாவில் அன்டாரியா என்ற இடத்தில் தங்கியுள்ளனர். அங்கு ரூபாய் 300 கோடி பரிசு தொகைக்கான லாட்டரி சீட்டை வாங்கினர்.

அந்த சீட்டை அபியோலா தனது பர்சில் வைத்திருந்தார். இதற்கிடையே லாட்டரி சீட்டு இருந்த அந்த பர்ஸ் தொலைந்து விட்டது.ஆனால் அந்த லாட்டரி சீட்டுக்கு தான் பரிசு தொகை விழுந்தது. பரிசு விழுந்தும் அதை பெற முடியாததால் தம்பதி சோகம் அடைந்தனர்.

அந்த லாட்டரி சீட்டை வீடு முழுவதும் தேடிப் பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் "பர்ஸ்" காணவில்லை என போலீசில் புகார் செய்தனர்.

கடந்த மாதம் 1 ஆம் தேதிதான் பரிசு தொகையை பெற கடைசி நாளாகும். இந்த நிலையில் அவர்கள் வழக்கமாக செல்லும் தேவாலயத்துக்கு சென்றனர். அங்கு ஒரு பகுதியில் காணாமல் போன பர்ஸ் பொருட்களுடன் கிடந்தது.

இதனால் ஆச்சரியம் அடைந்த அவர்கள் தொலைந்து போன தங்களது பர்சை எடுத்து அதை திறந்து பார்த்தனர். உள்ளே அவர்களது லாட்டரி சீட்டு இருந்தது.

மகிழ்ச்சி அடைந்த அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்று தங்களது புகாரை வாபஸ் பெற்றனர். பிறகு கடைசி நேரத்தில் பரபரப்புடன் ரூபாய் 300 கோடி பரிசு தொகையை பெற்றனர்.அதன் பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பரிசு தொகையை கொண்டு உலகம் முழுவதும் சுற்றி வர அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+