மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு- அயர்லாந்து, ஜப்பான், சீனா விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!
Subscribe to Oneindia Tamil
ஜெனிவா: மருத்துவதுறையில் 2015ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அயர்லாந்து, ஜப்பான், சீனா நாட்டு விஞ்ஞானிகள் மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாக சேவையாற்றியோருக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான மருத்துவத் துறை நோபல் பரிசுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
BREAKING NEWS The 2015 #NobelPrize #Medicine to William C. Campbell @DrewUniversity, Satoshi Ōmura and Youyou Tu pic.twitter.com/qvH9XFZV7I
— The Nobel Prize (@NobelPrize) October 5, 2015 இந்த விருது அயர்லாந்தைச் சேர்ந்த காம்பெல், ஜப்பானைச் சேர்ந்த ஓமுரா, சீனாவின் யூயூடு ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த துறைகளுக்கான நோபல் பரிசு பெற்றோர் விவரங்கள் வெளியிடப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications