'டேட்டிங்'கில் பலாத்காரத்தை தடுக்கும் சூப்பர் 'நெயில்பாலிஷ்'
வாஷிங்டன்: அமெரிக்காவில் பெண்களை டேட்டிங் அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்வதை தடுக்க வடக்கு கரோலினா மாணவர்கள் புதிய நெயில்பாலிஷை கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெண்களை டேட்டிங் அழைத்துச் சென்று மதுவிலோ, குளிர்பானத்திலோ மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தனர். இது குறித்து ஆய்வு செய்த அவர்கள் ஒரு புதுமையான நெயில்பாலிஷை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நெயில்பாலிஷை போட்டால் பெண்கள் டேட் செல்கையில் அளிக்கப்படும் பானத்தில் ஏதாவது போதை, மயக்க வஸ்து கலக்கப்பட்டுள்ளதா என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். தங்களுக்கு அளிக்கப்படும் பானத்தை நெயில்பாலிஷ் போட்டுள்ள விரலால் கலக்க வேண்டும். அப்படி செய்யும்போது அந்த பானத்தில் ஏதாவது போதை, மயக்க வஸ்து கலக்கப்பட்டிருந்தால் நெயில்பாலிஷின் நிறம் மாறும்.












Click it and Unblock the Notifications