அமெரிக்காவிலிருந்து சிறப்பு விமானத்தில் இந்தியா புறப்பட்டார் ஒபாமா! நாளை காலை டெல்லி வருகை!!
வாஷிங்டன்: குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நாளை காலை இந்தியா வருகிறார். இதையொட்டி ஆன்ட்யூஸ் விமான படை தளத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் இன்று மாலை ஒபாமா புறப்பட்டார்.
குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமா நாளை இந்தியா வரவுள்ளார். 3 நாட்கள் இந்தியாவில் இருக்கும் அவர், பிரதமருடன் பேச்சுவார்த்தை, தொழிலதிபர்களுடன் சந்திப்பு, குடியரசு தின விழாவில் பங்கேற்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதையொட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு வாஷிங்டன்னிலுள்ள ஆன்ட்யூஸ் விமானப்படை தளத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் ஒபாமா கிளம்பினார். அவருடன் மனைவி மிச்சேல், உயர் அதிகாரிகள், எம்.பிக்கள் குழுவும் இந்தியா பயணிக்கிறது.
Andrews Air Base : President Barack Obama & Michelle Obama leave for India #ObamaInIndia pic.twitter.com/H2HYri9zIT
— ANI (@ANI_news) January 24, 2015 இந்தியா வரும் வழியில், ஜெர்மனியில், விமானம் நிறுத்தப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள உள்ள விமானம், டெல்லி பாலம் சர்வதேச விமான நிலையத்திற்கு நாளை காலை 10 மணியளவில் வந்தடையும். ஒபாமா வருகையையொட்டி தலைநகர் டெல்லியில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications