போலிக்கு இரங்கல் தெரிவித்து விட்டு கோல்ப் ஆடியது தப்புதான்.. ஒபாமா வருத்தம்
வாஷிங்டன்: அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் ஃபோலி தலை துண்டிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கையோடு தான் கோல்ப் விளையாடியிருக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஜேம்ஸ் ஃபோலி என்ற அமெரிக்க பத்திரிக்கையாளரை தலையை துண்டித்து கொலை செய்து அதை வீடியோ எடுத்து கடந்த மாதம் வெளியிட்டனர். அந்த சமயம் மார்தா தீவுகளில் விடுமுறையை கழித்து வந்தார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.

அவருக்கு ஜேம்ஸ் ஃபோலி கொலை பற்றி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் செய்தியாளர்கள் மத்தியில் கொலையை கண்டித்து பேசினார். அதன் பிறகு நண்பர்களுடன் சேர்ந்து கோல்ப் விளையாட சென்றுவிட்டார்.
ஒரு கொலை குறித்து அறிக்கை விட்டவுடன் ஒபாமா ஜாலியாக சிரித்து கோல்ப் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் இது குறித்து ஒபாமா கூறுகையில்,
அறிக்கை விட்ட கையோடு நான் கோல்ப் விளைாடியிருக்கக் கூடாது. ஃபோலியின் குடும்பத்தாரை சந்தித்து பேசும்போது நான் கஷ்டப்பட்டு அழுகையை அடக்கினேன் என்றார்.












Click it and Unblock the Notifications