அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரம்: புதிய கட்டுப்பாடுகளை விதித்தார் ஒபாமா !
நியூயார்க்: அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக துப்பாக்கி விற்பனை மற்றும் வாங்குவதற்குப் புதிய கட்டுப்பாடுகளை அதிபர் ஒபாமா நேற்று அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. ஆறுவயது குழந்தைகள்கூட தங்களுக்கு வேண்டாதவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் அவல நிலையும் அங்கு தான் நடந்து வந்தது. இந்த நிலையில் அங்குள்ள நிலைமையை மாற்ற துப்பாக்கி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று அதிபர் ஒபாமா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

ஆனால் இது தொடர்பாக அவர் சட்டம் இயற்ற விரும்பினாலும், அந்நாட்டு செனட் அவை அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறது. இந்நிலையில், தனது நிர்வாக உத்தரவு ஒன்றின் மூலம் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒபாமா முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கடைகள், பொருட்காட்சிகள் மற்றும் இணையதளங்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் நபரின் பின்னணி குறித்து தேசிய போலீசார் தீவிரமாக விசாரித்து அனுமதி அளித்த பின்னரே ஒருவருக்கு துப்பாக்கி விற்பனை செய்ய முடியும் என்று அதிபர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்காவின் சில இடங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications