Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2050ல் கடலில் தூண்டில் போட்டால் மீன் கிடைக்காது- “பிளாஸ்டிக்” தான் கிடைக்குமாம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகில் வருகின்ற 2050 ஆம் ஆண்டில் கடலில் மீன்களே இருக்காத அளவிற்கு பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக உலக பொருளாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த அறிக்கையில், "உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன.

இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி குப்பையை கொட்டுவதற்கு சமமானதாக இந்த பிளாஸ்டிக் குப்பைகள் விளங்குகின்றன.

2050ல் இருமடங்கு:

2050ல் இருமடங்கு:

இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் 2030 ஆம் ஆண்டுக்குள் இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மட்டுமே:

பிளாஸ்டிக் மட்டுமே:

இதுவே 2050 ஆம் ஆண்டுக்குள் 4 மடங்காக அதிகரித்து விடும். இதன் எதிரொலியாக, கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும் அபாயமான நிலை உருவாகும்.

20 மடங்காக அதிகரிப்பு:

20 மடங்காக அதிகரிப்பு:

தற்போது, கடலில் 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு 20 மடங்காக அதிகரித்துள்ளது.

ஒருமுறை உபயோகம்:

ஒருமுறை உபயோகம்:

அடுத்த 20 ஆண்டுகளில் இது மேலும் இரட்டிப்பாகும் அபாயமும் உள்ளது. பெரும்பாலான பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+