டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய நேரப்படி இன்று மாலை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார். ஆனால், வழக்கம் போல் இரவு நேரத்தில் பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பதிலடி கொடுப்போம் என்று இந்தியா அறிவித்துள்ளது.
May 12, 2025, 3:11 pm IST
இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் ஏராளமான ட்ரோன்களை ஏவியது - ஏகே பாரதி
May 12, 2025, 3:11 pm IST
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு மூலம் அதை முறியடித்தோம்- ஏகே பாரதி
May 12, 2025, 3:11 pm IST
எங்கள் அனைத்து ராணுவ தளங்களும் முழுமையாகச் செயல்பாட்டில் உள்ளன- ஏகே பாரதி
May 12, 2025, 3:11 pm IST
தேவை ஏற்பட்டால் எந்தவொரு எதிர்கால மிஷன்களை மேற்கொள்ளவும் தயார்- ஏகே பாரதி
May 12, 2025, 3:10 pm IST
இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றம் குறித்து பாதுகாப்பு படையினர் செய்தியாளர் சந்திப்பு
May 12, 2025, 3:10 pm IST
தீவிரவாதிகளுக்காக பாகிஸ்தான் ராணுவம் இந்த விவகாரத்தில் தலையிட்டது பரிதாபம்- ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி
May 12, 2025, 3:10 pm IST
பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது - ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி
May 12, 2025, 3:10 pm IST
உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தியது- ஏகே பாரதி
May 12, 2025, 3:10 pm IST
இந்த வலிமையான வான் பாதுகாப்பை உருவாக்கியதில் அரசுக்கு முக்கிய பங்கு உள்ளது- ஏகே பாரதி
May 12, 2025, 12:24 pm IST
இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது
தாக்குதல் நிறுத்தத்தை அடுத்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்
பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இந்தியா திட்டம்
இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய், பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் அப்துல்லா பேச்சுவார்த்தை
May 12, 2025, 11:04 am IST
பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று பாதுகாப்புத் துறை உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இன்று நண்பகலில் இந்தியா பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை செய்து வருகிறார்.
May 12, 2025, 10:36 am IST
இன்று நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை மிக முக்கியமானது என்று பாதுகாப்பு துறை சார்ந்த நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்த்வா கூறியுள்ளார். இது தொடர்பாக சஞ்சீவ் ஸ்ரீவஸ்த்வா கூறுகையில், “இன்று நடைபெற இருக்க கூடிய சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையே எட்டக்கூடிய புரிந்துணர்வு மீது கவனம் உள்ளது. இதை எப்படி தொடர்வது, மேலும் நிரந்தரமாக முன்னெடுத்து செல்வது என்பதில் கவனம் உள்ளது. ஏற்படக்கூடிய புரிதலை பாகிஸ்தான் மீண்டும் மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இன்று நடைபெறும் ஆலோசனையில் என்ன மாதிரியான முடிவு எட்டப்படுகிறது என்று பார்க்கலாம்” என்று கூறினார்.
May 12, 2025, 9:29 am IST
இந்தியா பாகிஸ்தான் மோதல் காரணமாக கடந்த 4 நாட்களாக எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இரவு நேரங்களில் டிரோன்கள் சத்தமும், வெடிசத்தமும் மக்களின் தூக்கத்தை கெடுத்தன. நீண்ட நாட்களுக்கு பின் நேற்று இரவில் அமைதி நிலவியது. அமிர்தசரஸ், பதான்கோட் மற்றும் பெரோஸ்பூர் போன்ற எல்லை மாவட்டங்களிலும் இயல்பு நிலை திரும்பியது.
May 11, 2025, 7:42 pm IST
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் - முப்படை அதிகாரிகள் தகவல்
May 11, 2025, 7:35 pm IST
அலை அலையாக டிரோன்களை ஏவி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அவைகளை இடைமறித்து வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா - விமானப்படை அதிகாரி ஏ.கே.பாரதி விளக்கம்
May 11, 2025, 7:34 pm IST
ராணுவ தலைமை தளபதி முழு அதிகாரம் கொடுத்துள்ளார் - முப்படை அதிகாரிகள் பேட்டி
May 11, 2025, 7:34 pm IST
ராணுவ நடவடிக்கையை நிறுத்தும் முடிவை மீறி இன்றிரவு மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - முப்படை அதிகாரிகள்
May 11, 2025, 7:09 pm IST
போரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாகிஸ்தான் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின - முப்படை அதிகாரிகள்
May 11, 2025, 7:09 pm IST
இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய அனைத்துத் தாக்குதல்களும் தோல்வியில் முடிந்தன - முப்படை அதிகாரிகள்
May 11, 2025, 7:09 pm IST
பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவத் தளங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை - முப்படை அதிகாரிகள் விளக்கம்.
May 11, 2025, 6:51 pm IST
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவாக உணர்த்தியுள்ளோம் - ராஜீவ் கய் விளக்கம்
May 11, 2025, 6:51 pm IST
பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது - ராஜீவ் கய்
May 11, 2025, 6:51 pm IST
மிகவும் ஆபத்தான தீவிரவாத முகாம்களை குறி வைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது - ராஜீவ் கய்
May 11, 2025, 6:51 pm IST
இந்தியாவின் தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன - ராஜீவ் கய்
May 11, 2025, 6:51 pm IST
இந்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் - ராஜீவ் கய்
May 11, 2025, 6:48 pm IST
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முப்படை தளபதிகள் செய்தியாளர் சந்திப்பு
May 11, 2025, 6:48 pm IST
ராணுவ நடவடிக்கைக்கான தலைமை இயக்குநர் ராஜீவ் கய் விளக்கம்
May 11, 2025, 6:48 pm IST
பாகிஸ்தானில் பல இடங்களில் தீவிரவாத முகாம்கள் செயல்பட்டது தெரியவந்தது - ராஜீவ் கய்
May 11, 2025, 12:53 pm IST
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் இன்னும் தொடர்கிறது. ஒதுக்கப்பட்ட பணிகளைத் துல்லியமாக தொழில்முறையுடன் வெற்றிகரமாக நிறைவேற்றினோம். சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பவும் நம்பவும் வேண்டாம்- விமானப்படை
The Indian Air Force (IAF) has successfully executed its assigned tasks in Operation Sindoor, with precision and professionalism. Operations were conducted in a deliberate and discreet manner, aligned with National Objectives.
Since the Operations are still ongoing, a detailed…
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று விமானப்படை பதிவு
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் இன்னும் தொடர்கிறது- விமானப்படை
ஒதுக்கப்பட்ட பணிகளைத் துல்லியமாக தொழில்முறையுடன் வெற்றிகரமாக நிறைவேற்றினோம்- விமானப்படை
சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பவும் நம்பவும் வேண்டாம்- விமானப்படை
The Indian Air Force (IAF) has successfully executed its assigned tasks in Operation Sindoor, with precision and professionalism. Operations were conducted in a deliberate and discreet manner, aligned with National Objectives.
Since the Operations are still ongoing, a detailed…
பாகிஸ்தானின் எல்லைக்குள் இந்திய ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் பிரதமர் உறுதி செய்துள்ளார்.
4:00 AM, 7 May
இந்தியாவின் தாக்குதலில் இருவர் உயிரிழந்துவிட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல்
பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டு இந்தியா பதிலடி
இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலி, 12 பேர் காயம் என பாகிஸ்தான் ராணுவம் தகவல்
4:11 AM, 7 May
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடந்தது குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவிற்கு இந்தியா தகவல் அளித்துள்ளது.
4:11 AM, 7 May
இந்தியாவின் அட்டாக் போர் நடவடிக்கை - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிக்கையில் அறிவிப்பு
பாகிஸ்தானில் 5 இடங்களில் கோழைத்தனமான தாக்குதல்களை எதிரிகள் நடத்தி உள்ளனர் - பாகிஸ்தான் பிரதமர்
போர் நடவடிக்கைக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமையும் உள்ளது - பாகிஸ்தான் பிரதமர்
4:14 AM, 7 May
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என தகவல்
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் பாகிஸ்தானில் 60 பேர் காயம் என தகவல்
4:32 AM, 7 May
பாகிஸ்தானில் நுழைந்து அத்துமீறாமல் இந்திய எல்லையில் இருந்தபடியே ஆபரேஷன் சிந்தூர்
2016, 2019 ஆம் ஆண்டு தாக்குதல்களை விட வீரியமான தாக்குதல் சிந்தூர் என்கிறார்கள்
இந்திய மண்ணில் இருந்து கொண்டே பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு
இந்தியா கொடுத்த பதிலடியில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை
6:04 AM, 7 May
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய வட மாநிலங்களில் விமான சேவை பாதிப்பு
ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸில் இன்று மதியம் வரை விமானங்கள் ரத்து
பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் விமானங்கள் இன்று மதியம் வரை ரத்து
6:18 AM, 7 May
பாகிஸ்தான் லாகூரில் அவசர நிலை பிரகடனம்
இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் லாகூரில் அவசரநிலை பிரகடனம்
இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் தரப்பில் அறிவிப்பு
6:28 AM, 7 May
பாகிஸ்தான் மீதான தாக்குதல் சீக்கிரம் முடிந்துவிடும் என நினைப்பதாக அதிபர் டிரம்ப் கருத்து
சமீப காலங்களில் நடப்பதை வைத்து பார்த்தால் ஏதோ நடக்க போகிறது என்பதை அறிந்திருந்தோம்- அதிபர் டிரம்ப்
இரு நாடுகளும் நீண்ட காலமாகவே மோதிக் கொண்டு இருந்தனர் - அதிபர் டிரம்ப்
இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்- அதிபர் டிரம்ப்
6:38 AM, 7 May
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கும் மூத்த இந்திய அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்
அமெரிக்கா, பிரிட்டன், சவுதி, ஐக்கிய அமீரகம், ரஷ்யா நாடுகளுக்கு மூத்த இந்திய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்
6:49 AM, 7 May
நள்ளிரவில் நடந்த ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து, முப்படை தளபதிகளிடம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். தற்போதுள்ள நிலைமை குறித்து மூன்று தளபதிகளிடமும் கேட்டறிந்தார்
7:07 AM, 7 May
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் திடீரென துப்பாக்கிச் சூடு
எல்லையில் துப்பாக்கி சூடு, ஷெல் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலில் அப்பாவி பொதுமக்கள் மூவர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தகவல்
7:19 AM, 7 May
ராஜஸ்தானின் பார்மரை சேர்ந்த ஷகூர் கான் கூறுகையில், "இந்தியா பழிவாங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் இந்திய ராணுவத்துடன் நிற்கிறோம். இந்தியாவுக்காகப் போராட நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்திய ராணுவத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்..." என்றார்.
7:33 AM, 7 May
ஆப்ரேஷன் சிந்தூர் கீழ் இந்திய பாதுகாப்பு படைகள் 9 இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.. அதில் 5 இடங்கள் பாகிஸ்தானிலும், 4 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் அமைந்துள்ளது.
7:44 AM, 7 May
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு மஜ்லீஸ் கட்சியின் ஓவைசி வரவேற்பு!
அசாதுதீன் ஓவைசி பதிவிட்டுள்ள ட்வீட்டில் "பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களில் நமது பாதுகாப்புப் படைகள் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல்களை வரவேற்கிறேன். மீண்டும் ஒரு பஹல்காம் சம்பவம் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் புகட்ட வேண்டும். பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். ஜெய் ஹிந்த்!" என பதிவிட்டுள்ளார்.
7:57 AM, 7 May
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதனால் காஷ்மீரில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
8:08 AM, 7 May
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்!
8:18 AM, 7 May
உலகம் பயங்கரவாதத்தைக் கண்டிப்பாகச் சகித்துக் கொள்ள கூடாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார். ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் கருத்து!
ஆபரேஷன் சிந்தூரை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நமது ஆயுதப்படைகளை நினைத்துப் பெருமைப்படுகிறேன். ஜெய் ஹிந்த்!" என்று பதிவிட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரில் 70-80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பாதுகாப்புப் படைகள் 9 இடங்களில் நடத்திய தாக்குதலில் 70-80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவம் தரப்பில் காலை 10 மணியளவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8:46 AM, 7 May
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஒன்பது இடங்களில் இந்திய பாதுகாப்பு படை நடத்திய தாக்குதல்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு. மகாராஷ்டிராவின் நாக்பூரில் தேசிய கொடியுடன் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
#WATCH | People in Nagpur hail the country following air strikes by Indian Armed Forces carried out on nine terror targets in Pakistan, PoK pic.twitter.com/UCWCd3Cx6V
ஆபரேஷன் சிந்தூருக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாகத் துணை நிற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
9:11 AM, 7 May
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து காஷ்மீர் ஸ்ரீநகர் விமான நிலையத்தை இந்திய விமானப்படை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சிவில் விமான போக்குவரத்து நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
9:32 AM, 7 May
ஜம்மு காஷ்மீர் எல்லை மாவட்டங்களில் நிலவும் சூழ்நிலையைக் காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடர்ந்து கண்காணித்து வருகிறார். எல்லை மாவட்டங்களில் நிலவும் சூழலைத் துல்லியமாகக் கண்காணித்து வருவதாகவும் எந்தவொரு சூழலையும் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும் காஷ்மீர் ஆளுநர் மாளிகை ட்வீட் செய்துள்ளது.
9:46 AM, 7 May
இந்தியாவின் ராணுவ நடவடிக்கை வருத்தமளிப்பதாகச் சீனா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாகச் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்தியாவின் ராணுவ நடவடிக்கை வருத்தமளிக்கிறது. தற்போது நடந்து வரும் விஷயங்கள் கவலை தருகிறது. சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அதேநேரம் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
9:56 AM, 7 May
பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவ நடவடிக்கை வருந்தத்தக்கது: சீனா கருத்து
பதற்றத்தைக் குறைக்க இரு நாடுகளும் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும்- சீனா
10:00 AM, 7 May
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்வீட்டரில், "நமது ஆயுதப் படைகளை நினைத்துப் பெருமைப்படுகிறோம். பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்குப் பாரதத்தின் பதில் தான் ஆபரேஷன் சிந்தூர் ஆகும். இந்தியா மற்றும் அதன் மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. பயங்கரவாதத்தை அதன் வேர்களிலிருந்து அழிப்பதில் பாரதம் உறுதியாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
10:13 AM, 7 May
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் நிலவும் சூழல் குறித்து காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆலோசனை நடத்துகிறார்.
10:26 AM, 7 May
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட இந்திய ராணுவ நடவடிக்கை குறித்து சற்று நேரத்தில் வெளியுறவுத்துறை விளக்கமளிக்கவுள்ளது. வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள்.
10:36 AM, 7 May
பாகிஸ்தானில் இந்திய ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். காஷ்மீர் துணை நிலை ஆளுநர், எல்லை பாதுகாப்பு படை தலைவர் ஆகியோருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யுமாறு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
India Pakistan War Live: India has launched 'Operation Sindoor', a counter-terrorism operation involving targeted strikes by the Indian Air Force (IAF) on nine terrorist bases in Pakistan and Pakistan-occupied Kashmir (PoK). The strikes occurred around 1:30 am in areas including Bahawalpur, Kotli, and Muzaffarabad. According to the Press Information Bureau (PIB), the operation was strategically planned for precision. PIB emphasized that Pakistani military facilities were deliberately avoided to focus solely on eliminating terrorism and prevent conflict escalation. This action follows the barbaric terrorist attack in Pahalgam that killed 26 people, and India states it has held those responsible accountable.