Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India Pakistan War LIVE: அடுத்து என்ன? இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய நேரப்படி இன்று மாலை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார். ஆனால், வழக்கம் போல் இரவு நேரத்தில் பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பதிலடி கொடுப்போம் என்று இந்தியா அறிவித்துள்ளது.

pakistan  war

May 12, 2025, 3:11 pm IST

இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் ஏராளமான ட்ரோன்களை ஏவியது - ஏகே பாரதி
May 12, 2025, 3:11 pm IST

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு மூலம் அதை முறியடித்தோம்- ஏகே பாரதி
May 12, 2025, 3:11 pm IST

எங்கள் அனைத்து ராணுவ தளங்களும் முழுமையாகச் செயல்பாட்டில் உள்ளன- ஏகே பாரதி
May 12, 2025, 3:11 pm IST

தேவை ஏற்பட்டால் எந்தவொரு எதிர்கால மிஷன்களை மேற்கொள்ளவும் தயார்- ஏகே பாரதி
May 12, 2025, 3:10 pm IST

இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றம் குறித்து பாதுகாப்பு படையினர் செய்தியாளர் சந்திப்பு
May 12, 2025, 3:10 pm IST

தீவிரவாதிகளுக்காக பாகிஸ்தான் ராணுவம் இந்த விவகாரத்தில் தலையிட்டது பரிதாபம்- ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி
May 12, 2025, 3:10 pm IST

பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது - ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி
May 12, 2025, 3:10 pm IST

உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தியது- ஏகே பாரதி
May 12, 2025, 3:10 pm IST

இந்த வலிமையான வான் பாதுகாப்பை உருவாக்கியதில் அரசுக்கு முக்கிய பங்கு உள்ளது- ஏகே பாரதி
May 12, 2025, 12:24 pm IST

இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது

தாக்குதல் நிறுத்தத்தை அடுத்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்

பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இந்தியா திட்டம்

இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய், பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் அப்துல்லா பேச்சுவார்த்தை
May 12, 2025, 11:04 am IST

பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று பாதுகாப்புத் துறை உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இன்று நண்பகலில் இந்தியா பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை செய்து வருகிறார்.
May 12, 2025, 10:36 am IST

இன்று நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை மிக முக்கியமானது என்று பாதுகாப்பு துறை சார்ந்த நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்த்வா கூறியுள்ளார். இது தொடர்பாக சஞ்சீவ் ஸ்ரீவஸ்த்வா கூறுகையில், “இன்று நடைபெற இருக்க கூடிய சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையே எட்டக்கூடிய புரிந்துணர்வு மீது கவனம் உள்ளது. இதை எப்படி தொடர்வது, மேலும் நிரந்தரமாக முன்னெடுத்து செல்வது என்பதில் கவனம் உள்ளது. ஏற்படக்கூடிய புரிதலை பாகிஸ்தான் மீண்டும் மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இன்று நடைபெறும் ஆலோசனையில் என்ன மாதிரியான முடிவு எட்டப்படுகிறது என்று பார்க்கலாம்” என்று கூறினார்.
May 12, 2025, 9:29 am IST

இந்தியா பாகிஸ்தான் மோதல் காரணமாக கடந்த 4 நாட்களாக எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இரவு நேரங்களில் டிரோன்கள் சத்தமும், வெடிசத்தமும் மக்களின் தூக்கத்தை கெடுத்தன. நீண்ட நாட்களுக்கு பின் நேற்று இரவில் அமைதி நிலவியது. அமிர்தசரஸ், பதான்கோட் மற்றும் பெரோஸ்பூர் போன்ற எல்லை மாவட்டங்களிலும் இயல்பு நிலை திரும்பியது.
May 11, 2025, 7:42 pm IST

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் - முப்படை அதிகாரிகள் தகவல்
May 11, 2025, 7:35 pm IST

அலை அலையாக டிரோன்களை ஏவி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அவைகளை இடைமறித்து வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா - விமானப்படை அதிகாரி ஏ.கே.பாரதி விளக்கம்
May 11, 2025, 7:34 pm IST

ராணுவ தலைமை தளபதி முழு அதிகாரம் கொடுத்துள்ளார் - முப்படை அதிகாரிகள் பேட்டி
May 11, 2025, 7:34 pm IST

ராணுவ நடவடிக்கையை நிறுத்தும் முடிவை மீறி இன்றிரவு மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - முப்படை அதிகாரிகள்
May 11, 2025, 7:09 pm IST

போரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாகிஸ்தான் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின - முப்படை அதிகாரிகள்
May 11, 2025, 7:09 pm IST

இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய அனைத்துத் தாக்குதல்களும் தோல்வியில் முடிந்தன - முப்படை அதிகாரிகள்
May 11, 2025, 7:09 pm IST

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவத் தளங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை - முப்படை அதிகாரிகள் விளக்கம்.
May 11, 2025, 6:51 pm IST

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவாக உணர்த்தியுள்ளோம் - ராஜீவ் கய் விளக்கம்
May 11, 2025, 6:51 pm IST

பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது - ராஜீவ் கய்
May 11, 2025, 6:51 pm IST

மிகவும் ஆபத்தான தீவிரவாத முகாம்களை குறி வைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது - ராஜீவ் கய்
May 11, 2025, 6:51 pm IST

இந்தியாவின் தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன - ராஜீவ் கய்
May 11, 2025, 6:51 pm IST

இந்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் - ராஜீவ் கய்
May 11, 2025, 6:48 pm IST

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முப்படை தளபதிகள் செய்தியாளர் சந்திப்பு
May 11, 2025, 6:48 pm IST

ராணுவ நடவடிக்கைக்கான தலைமை இயக்குநர் ராஜீவ் கய் விளக்கம்
May 11, 2025, 6:48 pm IST

பாகிஸ்தானில் பல இடங்களில் தீவிரவாத முகாம்கள் செயல்பட்டது தெரியவந்தது - ராஜீவ் கய்
May 11, 2025, 12:53 pm IST

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் இன்னும் தொடர்கிறது. ஒதுக்கப்பட்ட பணிகளைத் துல்லியமாக தொழில்முறையுடன் வெற்றிகரமாக நிறைவேற்றினோம். சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பவும் நம்பவும் வேண்டாம்- விமானப்படை
May 11, 2025, 12:50 pm IST

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று விமானப்படை பதிவு

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் இன்னும் தொடர்கிறது- விமானப்படை

ஒதுக்கப்பட்ட பணிகளைத் துல்லியமாக தொழில்முறையுடன் வெற்றிகரமாக நிறைவேற்றினோம்- விமானப்படை

சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பவும் நம்பவும் வேண்டாம்- விமானப்படை
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+