பாக்-இல் பரபரப்பு! தோல்வியில் முடிந்த கடத்தல் முயற்சி.. இந்து பெண் படுகொலை! காரணம் கட்டாய மதமாற்றம்?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் 18 வயதான இந்து பெண் ஒருவர் கடத்தல் முயற்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Pakistan-ல் சிறுபான்மையினருக்கு நடக்கும் கொடுமைகள் | Oneindia Tamil

    பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் 18 வயதான இந்து பெண் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்த முயன்று உள்ளனர்.

    அச்சிறுமி அவர்களிடம் இருந்து தப்பி முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அச்சிறுமி கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாக உள்ளது.

     பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் நாட்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சிறுமி பூஜா ஓட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ரோஹி பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்யவே இதுபோன்ற கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. இது பாக் நாட்டில் எதோ ஒரு பகுதியில் நடைபெற்ற தனித்த சம்பவம் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் இதேபோல நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மற்றும் இந்து சிறுமிகள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்குக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்யப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

     சிறுபான்மை சமூகம்

    சிறுபான்மை சமூகம்

    சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர். பாகிஸ்தான் நாட்டின் சிறுபான்மை சமூகங்கள் கட்டாயத் திருமணம் மற்றும் மதமாற்றம் போன்ற பிரச்சினைகளை நீண்ட காலமாக எதிர்கொண்டு வருவதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர், அதேபோல இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து பாகிஸ்தான் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனப் பல உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

     சிந்து மாகாண அரசு

    சிந்து மாகாண அரசு

    முன்னதாக, சிந்து மாகாண அரசு கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணங்களைச் சட்டத்திற்கு விரோதமானதாக மாற்ற முயல்கிறது. இருப்பினும், பெண்கள் முஸ்லிம் ஆண்களைக் காதலித்த பின்னர், அவர்களின் விருப்பத்தின் பெயரிலேயே மதம் மாறுகிறார்கள் என்று கூறினர். பாகிஸ்தானில் இந்து சமூகத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 1.60 சதவீதமாகவும், சிந்துவில் 6.51 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சிறுபான்மையினர்

    சிறுபான்மையினர்

    பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினருக்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அங்கு மத சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடும் வன்முறையும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2020இல் கூட பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா தலைநகர் பெஷாவரில் இருக்கும் சில இந்து கோயில்கள் அடுத்து நொறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+