இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது.. பாக். போலீஸ் எஸ்.பி வாயிலிருந்தே வந்த உண்மை
இஸ்லாமாபாத்: இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் தாக்குதலால், பாகிஸ்தான் எல்லையில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதையும், இன்னும் பல தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் வைத்திருப்பதையும், குறிப்பிட்டு, பாகிஸ்தானின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், தொலைபேசியில் பேசிய பேச்சு கசிந்துள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி நள்ளிரவில் 12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணிக்குள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவம், அங்கு முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் கொன்று குவித்து திரும்பியது.

இந்த தாக்குதலை பாகிஸ்தான் மறுத்த போதிலும், எல்லையில் இந்திய ராணுவம் மீது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் பற்றி காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் முதலானோர் சந்தேகம் வெளிப்படுத்தினர். தாக்குதலுக்கான வீடியோ ஆதாரம் கேட்டார் கேஜ்ரிவால்.
இந்நிலையில், சிஎன்என்-நியூஸ்18 டிவி சேனலில், பாகிஸ்தானின் மிர்பூர் ரேஞ்ச், போலீஸ் எஸ்.பி, குலாம் அக்பர், தொலைபேசியில் பேசிய பேச்சு ரகசியமாக பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. உயர் அதிகாரியிடம் பேசுவதாக நினைத்துக்கொண்டு, டிவி சேனலிடம் இந்த விவரங்களை வெளியிட்டார் அந்த போலீஸ் எஸ்.பி.
குலாம் அக்பர் கூறிய அந்த பரபரப்பு தகவல்கள் இதுதாதான்: சார்.., ராத்திரி நேரம் அது. சுமார் 3-4 மணி நேரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனேகமாக அதிகாலை 2 மணியிலிருந்து 4 அல்லது 5 மணிவரை அந்த தாக்குதல் தொடர்ந்துள்ளது.
நமது ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் அப்போது கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் நமது ராணுவத்திற்கு உடனே தெரியவில்லை. தகவல் தெரிந்ததும், ராணுவத்தினர் ஆம்புலன்ஸ்சுகளில் விரைந்து வந்து தீவிரவாதிகளின் உடலங்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்திவிட்டனர். இவ்வாறு அக்பர் கூறினார்.
அதிர்ச்சி தகவல் ஒன்றையும் அக்பர் அப்போது கூறினார். "இந்திய எல்லையில் ஈடுருவ செய்ய தீவிரவாதிகளை நமது ராணுவம் அழைத்து வந்துள்ளது சார். இனிமேல் அவர்கள் கையில்தான் உள்ளது" என்று தெரிவித்தார். எத்தனை தீவிரவாதிகள் ஊருடுவ தயாராக உள்ளனர் என்று கேட்டபோது, அது ராணுவத்திற்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவர்கள் போலீசாரிடம் கூட சொல்வதில்லை என அந்த எஸ்.பி கூறியுள்ளார்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications