அந்த தப்பை செய்யாதீங்க.. பாக். ராணுவ தளபதியை வறுத்தெடுத்த அமெரிக்கா! இந்தியாவுக்கு சப்போர்ட்
வாஷிங்டன்: இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவுடன் மோதலை தவிர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கெனவே ஒரு முறை இதே போன்று அறிவுறுத்தியும் பாகிஸ்தான் கேட்பதாக தெரியவில்லை. இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்த அறிவுறுத்தல் வந்திருக்கிறது.

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதலை தொடங்கியிருக்கிறது. எல்லை பகுதிகளான ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியிருந்தது. இதனை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. இருப்பினும் ஷெல் குண்டுகள் ஜம்மு காஷ்மீரின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டு விழுந்ததால், உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல நேற்றிரவும் தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கியிருக்கிறது. இதனை வழக்கம்போல இந்திய ராணுவமும், விமானப்படையும் முறியடித்திருக்கிறது.
ஆனால் இதேபோல தொடர்ந்தால் இந்தியா கடுமையான பதிலடியை கொடுக்கும். இரு நாடுகள் வசமும் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. எனவே, இந்த தாக்குதலை பாகிஸ்தான் உடனடியாக தவிர்க்க வேண்டும்.
இன்று காலை பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருக்கு போன் போட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்தியா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கிடையே அமைதி உருவாகும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அமைதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் எனவும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications