தாக்குதலை கைவிட்ட பாகிஸ்தான்! இந்தியா திருப்பி அடிக்க தொடங்கியதும்.. பம்பிய பாக். வெளியுறவு அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுக்க முடியாமல் பாகிஸ்தான் இந்தியாவின் வட மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இந்தியாவும் தக்கப் பதிலடி கொடுத்து வருகிறது. முதல் வீர ஆவேசமாகத் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான், தாக்குதல் அதிகமாகவே அப்படியே பல்டி அடித்தது.

கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூரை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

India Pakistan India pakistan

பாகிஸ்தான்

ஆனால், இந்திய ராணுவத்தின் வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. கடந்த இரண்டு நாட்களாகவே எல்லையில் உள்ள பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் இந்தியா திருப்பி அடிக்கவில்லை.. இந்தியா நோக்கி வரும் ட்ரோன்களை மட்டுமே பாகிஸ்தான் நிறுத்தியது. ஆனால், நேற்றைய தினம் இந்தியா இறங்கி அடித்தது. பாகிஸ்தானில் உள்ள சுமார் 6 ஏர் பேஸ்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. குறிப்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே கூட தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தானின் ரேடார் அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா காலி செய்தது.

திருப்பி அடித்த இந்தியா

இந்தியா இதுபோல திருப்பி அடிக்கும் என்பதை பாகிஸ்தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தியா அதிகபட்சம் எல்லையோரப் பகுதிகளில் மட்டுமே தாக்குதல் நடத்தும் என்றே பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஆனால், இந்தியா பாகிஸ்தான் முழுக்க 6 ஏர் பேஸ்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் ராணுவத் தளம் அமைந்துள்ள நூர் கான் விமானத் தளம் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தியது. இது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வெறும் 10 கிமீ தூரத்தில் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

யூடர்ன் போட்ட பாகிஸ்தான்

இந்தியா இந்தளவுக்குத் திருப்பி அடிக்கும் என்தை பாக். சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாகவே பாகிஸ்தான் திடீரெனத் தனது டோனை மொத்தமாக மாற்றிக் கொண்டது. தாக்குதலையே கூட மொத்தமாக நிறுத்தவும் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் தெரிவித்தார். போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகும் முன்பே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தளவுக்குச் சூழல் செல்ல பாகிஸ்தான் தான் பிரதானக் காரணமாக இருந்தது. ஒவ்வொரு சூழலிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த அதற்கு இந்தியா பதிலடி மட்டுமே கொடுத்தது. ஆனால், அதை மறைக்கும் வகையில்.. இந்தியா தனது ராணுவத் தாக்குதலை நிறுத்தினால் தனது நாடும் தாக்குதலை நிறுத்தம் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ரெடியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வெளியான தகவல்

பாகிஸ்தான் ராணுவத் தளங்கள் மீது இந்திய நடத்திய தாக்குதலால் அங்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே நிலைமை தணிக்க பாகிஸ்தான் விரும்பியுள்ளது.. இந்தியாவின் மூத்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மோதலை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் நடந்துள்ளன. இந்தச் சூழலில் தான் சற்று நேரத்திற்கு முன்பு இந்தியா பாகிஸ்தான் இடையேயான சண்டை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+