For Daily Alerts
Just In
பாக். பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதியானது- வீட்டில் தனிமை படுத்தி கொண்டார்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மருத்துவர் ஃபைசல் சுல்தான் அறிவித்துள்ளார். மேலும் இம்ரான்கான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ஃபைசல் சுல்தான் தெரிவித்தார்.
பாகிஸ்தானிலும் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் பிரதமர் இம்ரான்கான்ன் கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் இம்ரான்கான் மருத்துவர் ஃபைசல் சுல்தான் இன்று ட்விட்டர் பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
PM Imran Khan has tested positive for Covid-19 and is self isolating at home
— Faisal Sultan (@fslsltn) March 20, 2021
மேலும் இம்ரான்கான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றும் ஃபைசல் சுல்தான் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Pakistan Prime Minister Imran Khan has tested positive for coronavirus.
Story first published: Saturday, March 20, 2021, 15:29 [IST]