ஒவ்வொரு நாடாக சென்று.. தலை குனிந்து நின்றோம்! அவமானத்தை சொல்லி வேதனைப்பட்ட பாக். பிரதமர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தற்போது வரலாறு காணாத கடனில் சிக்கியிருக்கிறது. இருப்பினும் பொருளாதாரத்தை தக்க வைத்துக்கொள்ள மேலும் கடனை வாங்கி குவித்து வருகிறது. இப்படி கடன் வாங்க போகும்போது, தான் சந்தித்த அவமானங்கள் குறித்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேதனையுடன் பகிர்ந்திருக்கிறார்.
நேற்று இஸ்லாமாபாத்தில் நடந்த தொழிலதிபர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் ஷெபாஸ் ஷெரீப், தனது நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாடுகளில் கடன் வாங்குவதால் ஏற்படும் அவமானம் குறித்து மிகவும் உருக்கமாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார்.

பாகிஸ்தானின் பொருளாதாரம்
"நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது. சாமானிய மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்தனர். மேலும், 2023-ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) நிர்வாக இயக்குநருடன் பாரிஸில் நான் சந்தித்த கூட்டத்தைப் பற்றியும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். அக்கூட்டத்திற்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியம் ஒரு பொருளாதாரத் திட்டத்தை ஒப்புதல் அளித்தது. இது பாகிஸ்தானின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த உதவியது.
தலை குனிந்த பாக்., பிரதமர்
கடினமான காலங்களில் நட்பு நாடுகள் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு அளித்தது. ஆனால் கடன் கேட்டு போகும் போது நமது தலை குனிந்துதான் இருக்கும். ராணுவ தளபதி ஆசிம் முனீருடன் இணைந்து, பல பில்லியன் டாலர் கடன்களைப் பெற பல நாட்டுத் தலைவர்களை சந்தித்திருக்கிறேன்.
பாகிஸ்தானின் கடன்
இருப்பினும், நட்பு நாடுகளிடம் நாங்கள் எப்படி கடன்களைக் கேட்டோம் என்று.. எங்களால் உங்களிடம் விவரிக்க முடியாது. அந்த நொடி அப்படி நெருக்கடியாக இருந்தது. நட்பு நாடுகள் எங்களை ஏமாற்றவில்லை. ஆனால், கடன் வாங்கச் செல்பவர்கள் தலைகுனிந்துதான் செல்ல வேண்டும். கடன்கள் சில கடமைகளையும், பொறுப்புகளையும் உருவாக்குகின்றன, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.
உதவும் நாடுகள்
கடன் வாங்கச் செல்லும்போது, உங்கள் தன்னம்பிக்கையை விலையாகக் கொடுத்து நீங்கள் ஈடு கட்ட வேண்டும். சமரசங்கள் செய்ய வேண்டும்... சில சமயங்களில், நியாயமற்ற கோரிக்கைகள் வரலாம், அதை நிறைவேற்ற எந்தக் காரணமும் இல்லாதபோதிலும் நீங்கள் அதைச் செயல்படுத்த வேண்டும்" என்று பேசியிருக்கிறோம்.
சீனாவின் உதவி
அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் கடன்களை நிர்வகிக்க சீனா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் உள்ளிட்ட பல நாடுகளின் நிதி உதவியை பாகிஸ்தான் பெரிதும் நம்பியுள்ளது. இந்த நாடுகள், ஐ.எம்.எஃப் உடன் இணைந்து, பணத்தட்டுப்பாடுள்ள பாகிஸ்தானுக்கு வழக்கமான கடன்கள் மற்றும் கால நீட்டிப்புகளை வழங்கி வருகின்றன.
இப்படி இருக்கையில் பாகிஸ்தான் சந்தித்துள்ள நெருக்கடி குறித்து, அந்நாட்டு பிரதமர் வெளிப்படையாக பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications