தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைதான் பாகிஸ்தான்.. ஐநாவில் இந்தியா சரமாரி குற்றச்சாட்டு!
சர்வதேச அளவில் தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை பாகிஸ்தான் என ஐநா அவைக் கூட்டத்தில் இந்தியா சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளது.
ஜெனிவா: சர்வதேச அளவில் தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் நாடுதான் பாகிஸ்தான் என ஐநா அவைக் கூட்டத்தில் இந்தியா சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளது.
ஐநா பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாசி காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக தீவிரவாதத்தை இந்தியா தூண்டி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, மேலும் பாகிஸ்தான் பிரதமரின் குற்றச்சாட்டுக்கும் இந்தியா தக்கபதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா சரமாரி குற்றச்சாட்டு
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்திய தூதர் ஈனம் காம்பீர் பங்கேற்றார். பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுத்த அவர் அந்நாட்டின் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார்.

பாகிஸ்தான் கூறுவதை ஏற்கமுடியாது
அதாவது ஒசாமா பின்லேடனை பாதுகாத்தும், முல்லா ஒமருக்கு அடைக்கலம் கொடுத்ததும் பாகிஸ்தான். அப்படிப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார்.

தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் ஃபேக்டரி
குறுகிய கால வரலாற்றில், புவியியல் அமைப்பில் தீவிரவாதத்துடன் பாகிஸ்தான் பெயர் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் தீரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் உள்ளது. தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்து வருகிறது என்றும் ஈனம் காம்பீர் சாடினார்

ஒற்றுமையயை சிதைக்க முடியாது
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஈனம் காம்பீர் கூறினார். எந்தளவு எல்லைதாண்டிய தீவிரவாதத்தை பயன்படுத்தினாலும், இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் இனி டெரரிஸ்தான்
பாகிஸ்தானை இனி டெரரிஸ்தான் என்று அழைக்கலாம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றி வருவதாகவும் அவர் சாடினார். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு முழு பாதுகாப்பையும் அளித்து வருவதாகவும் ஈனம் காம்பீர் குற்றம்சாட்டினார்.

விலையை கொடுத்து வருகிறது பாக்.
உலகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை கைவிட பாகிஸ்தானுக்கு இன்னும் அறிவுரைகள் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார். தற்போது, தீவிரவாதத்திற்கான விலையை பாகிஸ்தான் கொடுத்து வருகிறது என்றும ஈனம் காம்பீர் குற்றம்சாட்டினார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications