காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தாலும் காஷ்மீர் சபாநாயகருக்கு அழைப்பில்லை. பாக். திட்டவட்டம்
இஸ்லமாபாத் : காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டை இந்தியா புறக்கணித்தாலும், ஜம்மு காஷ்மீர் மாநில சபாநாயகரை மாநாட்டிற்கு அழைக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், செப்டம்பர் 30-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் 61-வது மாநாடு நடைபெறுகிறது.அதில் பங்கேற்குமாறு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் சபாநாயகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பாகிஸ்தான், காஷ்மீர் மாநில சபாநாயகருக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை.

பாகிஸ்தானின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்,காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால், இந்த விஷயத்தில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிகொள்ளப்போவது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் அயாஸ் சாதிக் கூறியதாவது...
மாநாட்டிற்கு ஜம்மு-காஷ்மீர் சபாநாயகருக்கு அழைப்பு விடுக்க மாட்டோம். ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபை சட்டப்பூர்வமானது அல்ல. அதனால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம். காஷ்மீர் பிரச்சினையை காரணம் காட்டி இந்தியா இந்த மாநாட்டைப் புறக்கணித்தால் அது அவர்களின் விருப்பம். நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications