இம்ரான்கானுக்கு இப்படி ஒரு பெயரா? சீனாவுக்காக செய்யும் சூப்பர் வேலை.. பாவம் கழுதைகள்!
இஸ்லாமாபாத்: உலகளவில் அதிக கழுதைகளை கொண்ட 3வது நாடாக உள்ள பாகிஸ்தான், சீனாவிடம் தான் வாங்கிய கடனை கழுதையை விற்று அடைத்து வருகிறது.
Recommended Video
கழுதை மேய்க்கத்தான் நீ லாயக்கு என்று ஆசிரியர்கள் மாணவர்களை திட்டியிருப்பார்கள். இன்றும் பல பேர் நிறுவனத்தின் மேலாளர்களிடமும், அலுவலகத்தின் உயர் அதிகாரிகளிடமும் திட்டு வாங்கி கொண்டிருப்பார்கள்.
ஆனால் ஒரு நாடே கழுதையை மேய்த்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. நமது பக்கத்து நாடான பாகிஸ்தான் உலகிலேயே அதிக கழுதைகளை வைத்துள்ளது. கழுதைகளை அதிக அளவில் இனம் பெருக்கம் செய்யவைத்து தனது நாட்டின் கடனை அடைத்து வருகிறது.

எருமை எண்ணிக்கை
விசித்திரமாக இருக்கிறதா, இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பாகிஸ்தான் மாடு வளர்ப்பிலும் கழுதை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில் எருமைகளின் எண்ணிக்கை 12 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆடுகள் எண்ணிக்கை 3.2 கோடியில் இருந்து 3.5 கோடியாக உயர்ந்துள்ளது.

56 லட்சம் கழுதைகள்
செம்மறி ஆடு எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சம் அளவிற்கு புதிதாக உயர்ந்து வருகிறது. இதேபோல், கழுதைகளின் எண்ணிக்கை கடந்த ஒரே ஆண்டில் ஒரு லட்சம் அதிகரித்து இருக்கிறது. இப்போதைக்கு பாகிஸ்தானில் 56 லட்சம் கழுதைகள் இருக்கின்றன. பாகிஸ்தான் தனது நாட்டில் கழுதைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு சீனாவும் முக்கிய காரணம்

வருமானம்
கழுதைகளுக்கு சீனாவில் அதிகளவில் மவுசு உள்ளது. ஆண்மையை அதிகரிக்கும் கொழுப்பு சத்துகள் கழுதையின் பாலில் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. மேலும் கழுதை கறியில் இருந்து பல்வேறு நோய்களுக்கு பாரம்பரிய மருந்துகள் கிடைக்கின்றன. அதனால், பாகிஸ்தானிடம் இருந்து ஆண்டுதோறும் 80 ஆயிரம் கழுதைகளை சீன நிறுவனங்கள் வாங்கி கொன்று, மருந்துகளை தயாரிக்கின்றன. இதன் மூலமாக பல கோடி ரூபாயை பாகிஸ்தான் வருமானமாக ஈட்டி வருகிறது.

சீனாவிடம் வாங்கிய கடன்
சீனாவிடம் இருந்து வாங்கியுள்ள பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகள் விற்பனை மூலமாகவும் பாகிஸ்தான் அரசு அடைத்து வருகிறது.. இதன் காரணமாகவே, கழுதைகள் இனப்பெருக்கத்தை பெருக்குவதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆர்வமாக உள்ளார்.. கழுதைக்காகவே பாகிஸ்தானில் தனி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

கிண்டல்
கழுதைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது பாகிஸ்தானில் சர்ச்சையாகி உள்ளது பிரதமராக இம்ரான் பொறுப்பேற்றதில் இருந்து கழுதைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகி வருகிறது. இதனால், எதிர்கட்சிகள் பிரதமர் இம்ரான்கானை 'கழுதைகளின் அரசன்' என பட்டப்பெயர் சூட்டி கிண்டல் செய்து வருகின்றன.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications