நேபாளத்திற்கு மாட்டுக்கறியை அனுப்பிய பாகிஸ்தான்... நிவாரண உதவியில் விஷமம்
காத்மாண்டு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு பாகிஸ்தான் மாட்டு இறைச்சி அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் சனிக்கிழமை நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணி நடந்து வருகிறது.
நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்து வீதியில் வாழும் மக்களுக்கு பல்வேறு நாடுகள் மருந்து, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அளித்து உதவி வருகின்றன. அந்தவகையில் பாகிஸ்தான் நேபாளத்திற்கு நிவாரண உதவி அளித்தது. அதில், உடனடியாக உண்ணக்கூடிய வகையிலான மாட்டுக்கறியும் அடக்கம்.

நேபாளத்தை பொறுத்த வரையில், பசு, காளைகளை தெய்வமாக கும்பிடும் பழக்கம் இருந்து வருகிறது. மேலும், பசுவதைக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் அந்நாட்டில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேபாளத்திற்கு பாகிஸ்தான் மாட்டுக்கறியை விஷமத்தனமாக அனுப்பி உள்ளது என எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஏற்கனவே நிலநடுக்க பாதிப்பால் அதிர்ச்சியடைந்துள்ள அந்நாட்டு மக்களுக்கு பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அதிருப்தியையும், வேதனையையும் அளித்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த நேபாள அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications