அதிகாலை நேரம்.. பாகிஸ்தானில் நேருக்குநேர் மோதிய 2 ரயில்கள்.. 30பேர் பலி,பலர் படுகாயம்.. வீடியோ வைரல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இரண்டு ரயில்கள் நெருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர், மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பாகிஸ்தான் நாட்டில் ரயில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையான ஒன்றாகவே உள்ளது. அந்நாட்டின் பெரும்பாலான ரயில் கட்டமைப்புகள் பிரிட்டன் ஆட்சி சமயத்தில் ஏற்படுத்தப்பட்டவை.
ஊழல், முறைகேடு உள்ளிட்டவை காரணமாக ரயில் பாதைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் அவ்வப்போது அங்கு ரயில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

32 பேர் பலி
தெற்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள தர்கி நகர் அருகே இரண்டு ரயில்கள் மோதி மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 30 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்
வடக்கு சிந்து மாகாணத்தில் இன்று அதிகாலை நடந்து இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கொடூர விபத்தில் 6 ரயில் பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. மேலும், விபத்து மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

எப்படி ஏற்பட்டது
கராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் சென்று கொண்டிருந்த மில்லட் எக்ஸ்பிரஸ், விடியற்காலையில் தடம் புரண்டது. அந்த ரயில் அருகிலிருந்த மற்றொரு ரயில் பாதையில் குறுக்கே சென்றுவிட்டது. அப்போது ராவல்பிண்டியில் இருந்து எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரதமர் இரங்கல்
இந்த ரயில் விபத்து அதிர்ச்சி அளிப்பதாகவும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ளுமாறும் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications