அதிகாலை நேரம்.. பாகிஸ்தானில் நேருக்குநேர் மோதிய 2 ரயில்கள்.. 30பேர் பலி,பலர் படுகாயம்.. வீடியோ வைரல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இரண்டு ரயில்கள் நெருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர், மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பாகிஸ்தான் நாட்டில் ரயில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையான ஒன்றாகவே உள்ளது. அந்நாட்டின் பெரும்பாலான ரயில் கட்டமைப்புகள் பிரிட்டன் ஆட்சி சமயத்தில் ஏற்படுத்தப்பட்டவை.
ஊழல், முறைகேடு உள்ளிட்டவை காரணமாக ரயில் பாதைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் அவ்வப்போது அங்கு ரயில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

32 பேர் பலி
தெற்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள தர்கி நகர் அருகே இரண்டு ரயில்கள் மோதி மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 30 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்
வடக்கு சிந்து மாகாணத்தில் இன்று அதிகாலை நடந்து இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கொடூர விபத்தில் 6 ரயில் பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. மேலும், விபத்து மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

எப்படி ஏற்பட்டது
கராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் சென்று கொண்டிருந்த மில்லட் எக்ஸ்பிரஸ், விடியற்காலையில் தடம் புரண்டது. அந்த ரயில் அருகிலிருந்த மற்றொரு ரயில் பாதையில் குறுக்கே சென்றுவிட்டது. அப்போது ராவல்பிண்டியில் இருந்து எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரதமர் இரங்கல்
இந்த ரயில் விபத்து அதிர்ச்சி அளிப்பதாகவும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ளுமாறும் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications