கள்ளநோட்டு, தீவிரவாதிகளுக்கு உதவி: பாக். தூதரக அதிகாரியை வெளியேற்றிய வங்கதேசம்
டாக்கா: தீவிரவாதிகளுக்கு உதவியது மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைக்க இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தொடர்பாக டாக்காவில் பணியாற்றிய பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வங்கதசே அரசு நாட்டை விட்டு வெளியேறுமாறு தெரிவித்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி முகமது மசார் கான். அவர் தீவிரவாதிகளுக்கு உதவி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க அஸ்ஸாம், மேற்கு வங்க எல்லைகள் மூலம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 12ம் தேதி வங்கதேச போலீசார் கானை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதில் முன்னாள் ராணுவ அதிகாரிகள், படித்தவர்கள் மற்றும் சிறு சிறு குற்றவாளிகள் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ஆனால் கான் தூதரக அதிகாரி என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கானை நாட்டை விட்டு வெளியேறுமாறு வங்க தேச அரசு உத்தரவிட்டுள்ளது. கான் கைது செய்யப்பட்ட பிறகு டாக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. முன்னதாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 4 பேர் கடந்த மாதம் டாக்காவில் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்பது தெரிய வந்தது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications