வாழ்க்கை வசந்தமாய் இனிப்பது திருமணத்துக்கு முன்பா? பின்பா?: அமீரகத்தில் நடந்த நகைச்சுவை பட்டிமன்றம்
அல் அய்ன்: அமீரகத்தின் அல் அய்ன் நகரில் வாழ்க்கை வசந்தமாய் இனிப்பது திருமணத்துக்கு முன்? பின்? என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பசுமை நகராக இருந்து வருகிறது அல் அய்ன். அல் அய்ன் தமிழ் குடும்பம் வாழ்க்கை வசந்தமாய் இனிப்பது திருமணத்துக்கு முன்? பின்? என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஒன்றை இந்திய சமூக மைய உள்ளரங்கத்தில் நடத்தியது.

இந்த பட்டிமன்றத்தின் நடுவராக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் பீ.மு.மன்சூர் கலந்து கொண்டார். அவர்

நகைச்சுவை உணர்வுடன் பட்டிமன்றத்தை கொண்டு சென்ற விதம் அல் அய்ன் நகரில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை மிகவும் கவர்ந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழின் சுவையை மிகவும் இனிமையாக ரசித்ததாக பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
அதன் பின்னர் சிறப்பு விருந்தினர் பீ.மு.மன்சூர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications