ஹிட்லரை பாராட்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதி
லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித்தார்தா தார் சர்வாதிகாரி ஹிட்லரை புகழ்ந்து பேசும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித்தார்தா தார் என்பவர் இஸ்லாத்திற்கு மாறி தனது பெயரை அபு ருமைசா என்று வைத்துக் கொண்டார். முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்த அவர் சிரியாவுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துவிட்டார்.
பிணையக் கைதிகளின் தலையை வெட்டி அதை வீடியோ எடுத்து வெளியிட்டு வரும் ருமைசாவை இங்கிலாந்து மீடியாக்கள் ஜிஹாதி சித் என்று அழைக்கின்றன. ருமைசா 2014ம் ஆண்டில் யூடியூப்பில் வெளியிட்ட வீடியோ தற்போ பிரபலம் ஆகியுள்ளது.
அந்த வீடியோவில் அவர் யூதர்களை ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்த சர்வாதிகாரியான ஹிட்லரை பாராட்டி பேசியுள்ளார்.
ருமைசா சிரியாவில் இருந்து இங்கிலாந்திற்கு வந்து சிறை தண்டனை அனுபவித்து திருந்தி வாழ வேண்டும் என்று தான் விரும்புவதாக அவரது சகோதரி கோனிகா தார் தெரிவித்துள்ளார்.