‛‛மோடியால் தான் முடியும்’’.. இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துங்க! டெல்லி ஜமா மசூதி இமாம் கூறிய வார்த்தை
டெல்லி: ஹமாசுக்கு எதிராக காசா மீதான இஸ்ரேல் போரை பிரதமர் மோடியால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். இஸ்லாமிய நாட்டு தலைவர்களால் அதனை செய்ய முடியாது. இதனால் பிரதமர் மோடி போரை நிறுத்த வேண்டும் என டெல்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி பரபரப்பாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் என்பது இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகனைகளை ஏவி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.

மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 200க்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். மேலும் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் பதிலடி கொடுத்தது.
போர் தொடங்கிவிட்டதாக கூறிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விமானப்படை மூலம் காசாவில் தாக்குதல் நடத்தினார். தற்போது காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இந்த போரில் தற்போது வரை காசாவில் 21,300க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். மேலும் காசாவில் ஏராளமான மக்கள் பசி, பட்டினியால் தவித்து வருகின்றனர்.
காசா மீது அணுகுண்டு போட தயாரான இஸ்ரேல்? அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்.. ஷாக்கில் உலக நாடுகள்
அதுமட்டுமின்றி தற்போதைய சூழலில் போர் என்பது இன்னும் சில மாதங்கள் தொடரும் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை என்பது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தான் காசா மீதான இஸ்ரேலின் போரை பிரதமர் மோடியால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும் என டெல்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரை நிறுத்த உலக நாடுகள் தவறிவிட்டது.
நொறுங்கிய இதயம்.. இளம்பெண்ணை கொன்று நிர்வாண ஊர்வலம் போன ஹமாஸ்.. உறுதி செய்த இஸ்ரேல்.. ஷாக்
குறிப்பாக இந்த விஷயத்தில் முஸ்லிம் நாடுகள் தங்களின் பொறுப்புகளை சரியாக செய்யவில்லை. போர் நிறுத்ததற்கான செயலில் அவர்கள் ஈடுபடவில்லை. ஆனால் பிரதமர் மோடியால் போரை நிறுத்த முடியும். இதற்கு காரணம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடிக்கு நல்ல உறவு உள்ளது. இதனால் வெளியுறவுத்துறை மூலம் இஸ்ரேலுடன் பேசி பிரதமர் மோடி போர் நிறுத்தம் செய்ய வேண்டும்’’ என கூறியுள்ளார்.
இஸ்ரேல்-காசா விவகாரத்தில் இந்தியா என்பது இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலை கண்டித்தது. அதேவேளையில் சுதந்திரமான பாலஸ்தீன நாடு அமைய வேண்டும். போரை கைவிட்டு இருதரப்பும் பேசி எல்லையை வரையறுத்து அமைதியாக வாழ வேண்டும் என இந்தியா போர் தொடங்கியது முதலே கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications