சார்க் மாநாடு: ஒரே மேடையில் இருந்தாலும் ஒருவார்த்தை கூட பேசிக் கொள்ளாத மோடி- நவாஸ் ஷெரீப்!!
காத்மாண்டு: தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கலந்து கொண்டு ஒரே மேடையில் அமர்ந்திருந்தாலும் இருவரும் ஒருவார்த்தை கூட பேசாமல் நேருக்கு நேர் பார்ப்பதைக் கூட தவிர்த்திருப்பது சர்வதேச அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள நாட்டுத் தலைநகரான காத்மாண்டுவில் சார்க் என்னும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டின் இடையே இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் நிலவியது.

இந்த நிலையில்தான் சார்க் மாநாடு நேற்று தொடங்கியது. இம் மாநாட்டில், ஒரே மேடையில் மோடியும், நவாஸ் ஷெரீப்பும் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் இடையே மாலத்தீவு மற்றும் நேபாள தலைவர்கள் இருந்தனர்.
ஒரே மேடையில் அமர்ந்திருந்தபோதும் நரேந்திர மோடியும், நவாஸ் ஷெரீப்பும் கை குலுக்கிக்கொள்ளவில்லை. ஏன் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதைகூட தெரிவித்துக் கொள்ளவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவும் இல்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன், நமது பிரதமருக்கும், பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த முறைப்படி திட்டமிடவில்லை. அது தொடர்பாக நமக்கு பாகிஸ்தானிடமிருந்து வேண்டுகோள் எதுவும் வரவில்லை என்றார்.
மேலும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பைத் தவிர இதர நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications